இந்தியா

பிஹார் முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் நிதிஷ் குமார் - மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் முதல்​வ​ராக 10வது முறை​யாக பொறுப்​பேற்று 4 மாதங்​களே ஆன நிலை​யில் மாநிலங்​களவை தேர்​தலில் போட்டியிட நிதிஷ்குமார் நேற்று வேட்​பு மனு தாக்​கல் செய்​தார்.

பிஹார் சட்​டப்​பேர​வைக்கு கடந்த ஆண்டு நவம்​பரில் நடைபெற்ற தேர்​தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது. 10-வது முறை​யாக பிஹார் முதல்​வ​ராக நிதிஷ்குமார் பதவி​யேற்றார். இந்​நிலை​யில் பிஹாரில் விரை​வில் காலி​யாகும் 5 மாநிலங்​களவை இடங்களுக்கான வேட்​பு மனு தாக்​கல் நேற்று நிறைவடைய இருந்தது. இத்​தேர்​தலில் போட்​டி​யிட நிதிஷ் குமார் நேற்று திடீரென வேட்​பு மனு தாக்​கல் செய்​தார்.

          

முன்​ன​தாக, பிஹார் மக்​களுக்கு நிதிஷ் குமார் விடுத்​துள்ள செய்தி​யில் "கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக நீங்​கள் என் மீது நம்​பிக்கை வைத்து எனக்கு ஆதரவு அளித்து வரு​கிறீர்​கள். அந்த நம்​பிக்​கை​யில் தான் நாங்​கள் பிஹார் மக்​களுக்கு முழு அர்ப்பணிப்​புடன் சேவை செய்து வரு​கிறோம். உங்​களு​ட​னான இந்த உறவு எதிர்​காலத்​தி​லும் தொடரும் என்​றும் வளர்ச்சியடைந்த பிஹாரை உரு​வாக்க ஒன்​றிணைந்து பணியாற்று​வேன் எனவும் மனதார உறுதி அளிக்​கிறேன்” என்று கூறி​யுள்​ளார்.

முதல்​வ​ராக பதவி​யேற்ற 4 மாதங்​களில் அவர் தனது பதவியை ராஜி​னாமா செய்​கிறார். தேசிய அரசி​யலுக்கு செல்​லும் அவருக்கு விரை​வில் மத்​திய அமைச்​சர் பதவி வழங்​கப்​படலாம் என தெரிகிறது. இதற்​கிடை​யில் பிஹாரில் பாஜக தரப்​பில் ஒரு​வர் முதல்​வ​ராகலாம் என கூறப்​படு​கிறது. பிஹாரில் இது​வரை பாஜக தலை​மை​யில் ஆட்சி அமைந்​தது இல்​லை. பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்​வ​ராக பதவி​யேற்​றால் பிஹாரில் பாஜக தலைமையிலான முதல் அரசாக அது இருக்​கும்.

இந்​நிலை​யில் பாஜக தரப்​பில் முதல்​வர் பதவிக்​கான போட்​டி​யில் துணை முதல்​வர் சாம்​ராட் சவுத்​ரி, மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் ஆகியோர் முன்​னிலை​யில் உள்ளதாக கூறப்​படு​கிறது. ஐக்​கிய ஜனதா தளம் சார்​பில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்​வ​ராக பதவியேற்கலாம் எனவும் கூறப்​படு​கிறது. பிஹாரில் 5 மாநிலங்களவை இடங்​களுக்​கான தேர்​தல் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்​ளது.

இதில் பாஜக சார்​பில் கட்​சி​யின் தேசிய தலை​வர் நிதின் நவீன் மற்றும் மாநில பொதுச் செய​லா​ளர் சிவேஷ் குமார் போட்டியிடுகின்​றனர். என்​டிஏ கூட்​ட​ணி​யில் உள்ள ராஷ்ட்ரியலோக் மோர்ச்​சா​வின் தலை​வர் உபேந்​திர குஷ்​வாகா மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். ஐக்​கிய ஜனதா தளத்​தில் இருந்​து மத்தி​ய அமைச்​சர்​ ராம்​நாத்​ தாக்​கூர்​ கட்​சி​யின்​ 2-வது வேட்பாளராக வேட்​பு மனு தாக்​கல்​ செய்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT