இந்தியா

உத்தராகண்ட் குருத்வாராவில் நிஹாங் சீக்கியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

அசம்பாவிதம் தவிர்க்க ராணுவம் குவிப்பு

செய்திப்பிரிவு

டேராடூன்: நிஹாங் என்​பவர்​கள் சீக்​கியர்​களில் ஒரு பிரி​வினர் ஆவர். இவர்​கள், சீக்​கிய மதத்​தில் ஆயுதம் ஏந்​திய போர் வீரர்களாக அழைக்​கப்​படு​கின்​றனர்.

நாடு முழு​வதும் உள்ள குருத்​வா​ராக்​களுக்கு நிஹாங் சீக்​கியர்​கள் புனிதப் பயணம் மேற்​கொள்​கின்​றனர். கடந்த 16ம் தேதி உத்​த​ராகண்ட் மாநிலம், கர்​ணபிர​யாக் பகு​தி​யில் 6 நிஹாங் சீக்கியர்களுக்​கும் உள்​ளூர் மக்​களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிஹாங் சீக்​கியர்​கள் வாள்​களை வீசி​ய​தில் 4 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் ஒரு​வரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது.

இதுதொடர்​பாக 4 நிஹாங் சீக்​கியர்​கள் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்த சூழலில் உத்​த​ராகண்ட் மாநிலம், ருத்​ரபிர​யாக் மாவட்​டம், நாக​ராசு கிராமத்​தில் உள்ள குருத்​வா​ரா​வில் 7 நிஹாங் சீக்​கியர்​கள் கடந்த 20ம் தேதி நுழைந்தனர். அவர்​கள் குருத்​வா​ராவை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வந்து உள்​ளிருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

கைதானவர்​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும் என்று அவர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். அவர்​களின் போராட்​டம் நேற்று 3-வது நாளாக நீடித்​தது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக உத்​தர​காண்ட் போலீ​ஸார் மற்​றும் ராணுவ வீரர்கள் குருத்​வாரா வளாகத்​தில் குவிக்​கப்​பட்டு உள்​ளனர்.

SCROLL FOR NEXT