உயிரிழந்த நீலேஷ்குமார், அனாமிகா சமந்த்

 
இந்தியா

உ.பி. தீ விபத்தில் கருகி உயிரிழந்த திருமண ஜோடி - நிச்சயம் முடிந்து ஒரு வாரமான நிலையில் சோகம்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச தீ விபத்​தில் திரு​மணம் நிச்சயிக்கப்பட்டு ஒரு வார​மான நிலை​யில் ஜோடி ஒன்று கருகி உயி​ரிழந்த சோகம் தற்​போது தெரிய​வந்​துள்​ளது.

உத்தர பிரதேசம் லக்னோ அரு​கே​ அலிகஞ்ச் பகு​தியில் உள்ள வணிக வளாகத்​தின் முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்​பட்​டுள்​ளது. 15 முதல் 17 வயதுக்கு உட்​பட்ட பல மாணவர்​கள் இங்கு பயிற்சி பெற்று வந்​தனர்.

இந்​நிலை​யில் வணிக வளாகத்​தில் உள்ள 3-வது தளத்​தில் நேற்று முன்​தினம் மாலை திடீரென தீப்​பற்​றியது. இது மளமளவென பரவி அடுத்​தடுத்த தளங்​களுக்கு பரவியது. இதில் முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையத்​தில் இருந்த மாணவர்​கள் சிக்​கினர். இந்த மையத்​தில் ஏற்​பட்ட தீ, அரு​கில் உள்ள அடுக்​கு​மாடி குடியிருப்​புக்​கும் வேக​மாக பரவியது. இந்த விபத்​தில் 15 பேர் உயிரிழந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த தீவிபத்​தில் உயி​ரிழந்த 15 பேரில் திரு​மணம் நிச்​சய​மான ஜோடி ஒன்று இருந்​தது தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இந்த மையத்​தில் பணி​யாற்றி வந்த நீலேஷ் குமார், அவருக்​காக நிச்​ச​யிக்​கப்​பட்​டிருந்த அனாமிகா சமந்த் ஆகியோ​ரும் உயிரிழந்த 15 பேரில் அடக்​கம். நீலேஷ்கு​மார் உத்​தர பிரதேசத்தைச் சேர்ந்​தவர். அவரது காதலி அனாமிகா சமந்த். இவரும் இந்த பயிற்சி மையத்​திலேயே வேலை செய்து வந்​தார். இவர் மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்​தவர்.

இவர்​களது காதல் விவ​காரம் இரு வீட்​டாருக்​கும் தெரிய​ வந்து திருமணத்​துக்கு சம்​ம​தித்​தனர். இந்​நிலை​யில் கடந்த வாரம்​ தான் அனாமி​கா​வின் வீட்​டார், மேற்கு வங்​கத்​திலிருந்து உ.பி.க்கு வந்து மணமகன் வீட்​டாரிடம் திரு​மணப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது இரு​வருக்​கும் திரு​மணம் செய்ய இரு வீட்​டாரும் முடிவு செய்து நிச்​சய​மும் செய்​தனர். இந்​நிலை​யில்​ தான் இந்த தீ விபத்து நடந்து இரு​வரது உயிரும் பறி​போய் ​விட்​டது. திருமண ஏற்பாடு​கள் தொடங்​கிய வீட்​டில் தற்​போது ஈமச் சடங்குகளுக்கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இது குறித்து நீலேஷ்கு​மாரின் சகோ​தரர் அபிஷேக் கூறும்​போது, “திருமண நிச்​ச​யத்​துக்​காக கடந்த வாரம் சிறிய அளவில் நிகழ்ச்சியை எங்​கள் வீட்​டில் ஏற்​பாடு செய்​தோம். அனாமி​காவை எல்​லோருக்​கும் பிடித்​து​விட்​டது. அவர் ஒரு கள்​ளம், கபட​மில்​லாத பெண். எப்​போதும் சிரித்​துக் கொண்டே மகிழ்ச்​சி​யாக இருப்​பார். இரு​வரை​யும் இழந்​ததை எங்​களால் தாங்​கிக் கொள்ள முடியவில்லை.

அடுத்த வாரம் மேற்கு வங்​கத்​துக்​குச் சென்று அவர்​கள் வீட்​டினரைப் பார்த்​து​விட்டு வரலாம் என்று நினைத்​திருந்​தோம். ரயில் டிக்​கெட்​டும் முன்​ப​திவு செய்​து​விட்​டோம். ஆனால் எல்​லாம் தலைகீழாகப் போய்​விட்​டது. நிச்​ச​யம் முடிந்து ஒரு வார​மான நிலை​யில் இந்த சம்​பவம் நடந்​து​விட்​டது" என்​றார்.

SCROLL FOR NEXT