இந்தியா

மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளோம்: என்டிஏ சார்பில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணித் (என்டிஏ) தலை​வர்​கள், நிர்​வாகி​கள் கலந்து​கொண்ட விழா நடை​பெற்​றது.

இந்த விழா​வில் பிரதமர் மோடி கலந்​து​கொண்டு பேசி​ய​தாவது: தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிரதம​ராக நான் நீண்ட காலம் பதவி வகித்துள்​ளதை தனிப்​பட்ட சாதனை​யாகப் பார்க்​க​வில்​லை. என்டிஏ​வில் அங்​கம் வகிக்​கும் அனைத்​துக் கட்​சிகளின் கூட்டு சாதனை​யாகத் ​தான் இதை நான் காண்​கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் 12 ஆண்​டு​கால ஆட்​சி​யின் ஒரு முக்கிய வெற்றி என்​னவென்​றால், நாடு காங்​கிரஸின் தீய சுழற்சியி​ல் இருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் வளர்ச்சி மெது​வாகத்​தான் நிகழும் என்​றும், விரைவான வளர்ச்சி சாத்​தி​யமில்லை என்​றும் மக்​கள் நம்பவைக்கப்​பட்டு இருந்​தனர். மிகத் தந்​திர​மாக, அந்த மெதுவான வளர்ச்​சிக்கு ‘இந்து வளர்ச்சி விகிதம்' என்று பெயரிடப்பட்​டது.

நாட்​டில் விரை​வான வளர்ச்சி சாத்​தி​யமில்லை என்​றும், பொருளாதார முன்​னேற்​றம் மெது​வான வேகத்​தில் மட்​டுமே நிகழ முடி​யும் என்​றும் நம்​பும் வகை​யில் காங்​கிரஸ் அரசுகள் நாட்டு மக்களை பழக்​கப்​படுத்தி இருந்​தன. கொள்​கை​யில் தோல்வி ஏற்பட்​டால், காங்​கிரஸ் அரசுகள் அதை நாட்​டின் பெரும்பான்மையான இந்து மக்​கள் மீது சுமத்தி வந்​தனர். உண்மை​யில், இந்த மோச​மான கலாச்​சா​ரத்​துக்கு ‘காங்​கிரஸ் வளர்ச்சி விகிதம்' என்று பெயரிட்​டிருக்க வேண்​டும்.

ஆட்சி நிர்​வாகம், கொள்கை வழி​காட்​டு​தல், தெளி​வான நோக்​கம் மற்​றும் உறு​தி​யான நடவடிக்​கைகள் ஆகிய எது​வும் காங்​கிரஸ் ஆட்சிக் காலத்​தில் இல்​லை. அதன் விளை​வாகவே நாட்​டின் வளர்ச்சி மந்​த​மாக இருந்​தது. மக்​கள் மத்​தி​யில் ஏமாற்​ற​மும் ஏற்பட்​டது.

என்​னைப் பொறுத்​தவரை, மக்​களே இறைவனின் வடிவம். அதனால்​தான் இந்​தச் சேவையை நான் எப்​போதும் ஒரு ஆன்​மிகப் பணி​யாகவே கருதி வரு​கிறேன். இது ஒரு​போதும் தனிப்​பட்ட முயற்​சி​யாக இருந்​த​தில்​லை. இது ஒரு கூட்டு யாகமாக இருக்கிறது. இதில் நீங்களும் (கூட்டணிக் கட்சிகள்) மற்ற பல சகாக்களும் கடமை உணர்வுடன் சேவையை வழங்கியுள்ளீர்கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT