புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜிக்கு, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகள், கொள்முதல் மண்டிகளில் சுரண்டப்படுகின்றனர்.
தடையற்ற கொள்முதல் என நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், நெல்லின் ஈரப் பதம் மற்றும் தரத்தை காரணம் காட்டி குவிண்டாலுக்கு 7 கிலோவை பிடித்தம் செய்கின்றனர். மில் உரிமையாளர்கள், உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் இந்த சுரண்டல் நடைபெறுகிறது. இதன் மூலம் குறைந்த வருவாயை பெறும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.
இதைத் தடுக்க வேண்டும். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் இறங்குவர். இவ்வாறு நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.