எம்.பி. சஞ்சய் ராவத்

 
இந்தியா

“சிவசேனா கவுன்சிலர்களை ஓட்டலில் சிறை வைத்துள்ளது ஏன்?” - சஞ்சய் ராவத் கேள்வி

‘யார், யாரை கண்டு பயப்படுகிறார்கள்?’

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர​ உள்​ளாட்சி தேர்​தலில் மும்பை மாநகராட்சி​யில் மொத்​தம் உள்ள 227 வார்​டு​களில் பாஜக 89 வார்டு​களி​லும், சிவசேனா (ஷிண்டே அணி) 29 வார்​டு​களி​லும் வெற்றி பெற்​றன. ஆளும் கட்​சி​யில் உள்ள இந்த கூட்​ட​ணிக்கு மேயர் பதவியை கைப்​பற்​றும் பெரும்​பான்மை உள்​ளது. ஆனால் மேயர் பதவியை யார் பெறு​வது என்​ப​தில் போட்டி நில​வு​கிறது. இந்​நிலை​யில் தனது கட்​சி​யின் 29 கவுன்​சிலர்​களை மும்​பை​யில் உள்ள நட்​சத்​திர விடு​தி​யில் ஏக்​நாத் ஷிண்டே தங்கவைத்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனா (உத்​தவ் அணி) மாநிலங்களவை எம்.பி. சஞ்​சய் ராவத் கூறிய​தாவது: ஷிண்டே ஏற்​கெனவே தனது கட்சி கவுன்​சிலர்​களை 5 நட்​சத்​திர விடு​தி​யில் சிறை வைத்​துள்​ளார். இதே​போல் தங்​கள் கட்சி கவுன்​சிலர்​களை​யும் பாது​காப்​பான இடத்​தில் வைக்க பாஜக திட்​ட​மிட்டு வரு​கிறது. யார் யாரைக் கண்டு பயப்​படு​கிறார்​கள்? நீங்​கள் ​தான் ஆளும் கூட்​டணி அரசு. இது கேலிக்​கூத்​தாக உள்​ளது.

மும்பை மாநக​ராட்​சி​யில் நாங்​கள் எதிர்க்​கட்சி வரிசை​யில் அமர்​வோமா என்​பதை நாங்​கள் இன்​னும் முடிவு செய்​ய​வில்​லை. அரசி​யலில் நடை​பெறும் மாற்​றங்​களை ரசித்து கொண்​டிருக்​கிறோம். மும்பை மாநக​ராட்சி தேர்​தலில் பாஜக அதிக இடங்​களில் வென்​ற​தால், உலக பொருளா​தார அமைப்​பின் கூட்​டத்​தில் பங்​கேற்க சுவிட்​சர்​லாந்து சென்ற முதல்​வர் தேவேந்திர பட்​ன​விஸுக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது. அவர் பிரதம​ராக​வுள்​ளது ​போல் பெரு​மிதத்​துடன் செல்​கிறார். கல்​யான் -டோம்​பி​விலி நகராட்​சி​யில் பாஜக உறுப்​பினர்​களை தங்​கள் பக்​கம் இழுக்க ஏக்​நாத் ஷிண்டே முயற்​சித்​தார். அது​போல மும்​பை​யிலும்​ அவர்​ முயற்​சிக்​கலாம்​.இவ்​வாறு சஞ்​சய்​ ராவத்​ கூறி​னார்​.

குலுக்​கலில் மேயர்கள் தேர்வு: மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு 22-ம் தேதி குலுக்கல் முறையில் முடிவு செய்து கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்வதற்கான உத்தரவை மகாராஷ்டிராவின் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது.

இந்த குலுக்கல் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. சுழற்சி முறையிலான இடஒதுக்கீடு அடிப்படையில் மேயர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்யவுள்ளனர். முதலில் குலுக்கல் முறையில் பொதுப் பிரிவு, பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி என பிரிவுகள் தீர்மானிக்கப்படும். தகுதியான வேட்பாளர் மனு தாக்கல் செய்த பின் மேயரை கவுன்சிலர்கள் தேர்வு செய்வர். அவையின் மொத்த பலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஓட்டுக்களை பெறும் வேட்பாளர் மேயராக தேர்வு செய்யப்படுவார்.

மும்பைக்கு மகாயுதி மேயர்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று அளித்த பேட்டியில், "உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக சிவசேனா எந்த முடிவையும் எடுக்காது. சிவசேனாவும், பாஜக.,வும் கூட்டணியாக போட்டியிட்டன. அதனால் மகாயுதி கூட்டணி வேட்பாளர் மேயராக தேர்வு செய்யப்படுவார். தானே, கல்யாண் -டோம்பிவிலி, உல்காஷ்நகர் மற்றும் இதர நகராட்சிகளிலும் நாங்கள் இணைந்தே போட்டியிட்டோம். அங்கேயும் இதே முடிவுதான் பின்பற்றப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT