மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

 
இந்தியா

நாக்பூரில் 10,000 டன் அலுமினிய வடிவமைப்பு இயந்திரம் - ராஜ்நாத் சிங் இன்று பூமி பூஜை

செய்திப்பிரிவு

நாக்பூர்: ம​கா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் 10,000 டன் உற்​பத்​தித் திறன் கொண்ட அலுமினிய வடிவ​மைப்பு இயந்​திரத்தை நிறுவ, பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் இன்று பூமி பூஜை போடு​கிறார்.

நாக்​பூரில் உள்ள பாது​காப்​புத் துறை​யின் மக்​கள் தொடர்பு அதிகாரி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாக்​பூரின் அம்​பாஜாரி​யில் அமைந்​திருக்​கும் அரசுக்கு சொந்தமான யந்த்ரா இந்​தியா நிறுவன ஆயுதத் தொழிற்​சாலையில் அலுமினிய வடிவ​மைப்பு இயந்​திரத்தை (எக்​ஸ்ட்​ரூஷன் பிரஸ்) நிறு​வுவதற்கு மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்நாத் சிங் வெள்​ளிக்​கிழமை பூமி பூஜை போடு​வார்.

இந்த எக்​ஸ்ட்​ரூஷன் பிரஸ், ராணுவ தளவாட உற்​பத்​தித் துறைக்கு ஒரு முக்​கிய​மான தேசிய சொத்​தாக அமை​யும். இது பாது​காப்பு மற்​றும் விண்​வெளித் துறை​களின் தேவை​களைப் பூர்த்தி செய்​வதற்​காக, பெரிய, அதிக வலிமை மற்​றும் துல்​லிய​மான அலுமினிய கலவை வடிவங்​களை தயாரிப்​ப​தற்​கான நாட்​டின் திறனை வலுப்​படுத்​தும்.

இந்​தத் திட்​டம் முக்​கிய​மான அலுமினிய வடிவப் பாகங்​களின் இறக்​குமதி மீதான நுகர்​வைக் குறைப்​ப​தோடு, சுய​சார்பு இந்​தியா தொலைநோக்​குப் பார்​வை​யின் கீழ் உள்​நாட்டு உற்​பத்​தியை ஊக்குவிக்​க​வும் உதவும். இந்​நிகழ்ச்​சி​யில் மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர ஃபட்​னா​விஸ் மற்​றும் ராணுவ தளவாட உற்​பத்​தித் துறை செய​லா​ளர் சஞ்​சீவ் குமார் ஆகியோ​ரும் கலந்து கொள்வார்கள். இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

அலுமினிய எக்​ஸ்ட்​ரூஷன் பிரஸ் என்​பது சூடாக்​கப்​பட்ட அலுமினியத்​தை, பிரத்​யேக​மாக வடிவ​மைக்​கப்​பட்ட அச்சு வழியாக அதிக விசை கொடுத்து செலுத்​து​வதன் மூலம், அலுமினியத்​துக்​குத் தேவை​யான வடிவத்​தை வழங்​கும்​ ஒரு இயந்திரம்​ ஆகும்​.

SCROLL FOR NEXT