அமைச்சர் ஹர்தீப்

 
இந்தியா

கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சர் ஹர்தீப் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய தொழில் கூட்​டமைப்​பின் (சிஐஐ) வரு​டாந்​திர வணிக உச்சி மாநாடு டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் மத்​திய பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வா​யுத் துறை அமைச்​சர் ஹர்​தீப் சிங் புரி பங்​கேற்​றார்.

நிகழ்ச்​சிக்கு இடை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் கடந்த 4 ஆண்​டு​களில் எரிபொருள் விலை​யில் எந்த உயர்​வும் ஏற்​பட​வில்​லை. ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டதன் காரண​மாக எரிபொருள் கொள்​முதல் மற்​றும் விநி​யோகத்​தில் உலகின் பல நாடு​கள் கடுமை​யான சிக்​கல்​களை சந்​தித்தன. அந்​நாடு​களில் எரிபொருள் விலை 50 % முதல் 60 % வரை உயர்ந்​தன. ஆனால் நம் நாட்டில் அத்​தகைய சூழல் இல்லை.

இந்​தி​யா​விடம் தற்​போது முக்​கிய எரிசக்​திப் பொருட்​களின் கையிருப்பு போது​மான அளவை விட அதி​க​மாகவே உள்​ளது. இதில் 60 நாட்​களுக்​குப் போது​மான கச்சா எண்​ணெய், 60 நாட்களுக்​குப் போது​மான எல்​என்​ஜி, 45 நாட்​களுக்​குப் போது​மான எல்​பிஜி கையிருப்பு உள்​ளது. எனவே விநி​யோகம் சார்ந்த எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. அரசு நிலை​மையை தின​மும்​ உன்னிப்பாக கண்​​காணித்​து வரு​கிறது. எனவே மக்​கள்​ பீதியடைய வேண்​​டாம்​. இவ்​​வாறு ஹர்​தீப்​ சிங்​ புரி கூறி​னார்​.

SCROLL FOR NEXT