மம்தா பானர்ஜி |கோப்புப் படம்

 
இந்தியா

மேற்கு வங்க தேர்தலில் மத்திய படையினர் அத்துமீறல்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தின் இரண்​டாம் கட்ட தேர்​தலின் போது மத்​தி​யப் படை​யினர் பெண்​கள், குழந்​தைகள் என்​றும் பாராமல் மக்​கள் மீது தாக்​குதல் நடத்தி அத்​து​மீறி வரு​கின்​றனர். இதனால், மாநிலத்​தில் எந்த வாக்​குச்​சாவடி​யும் பாது​காப்​பாக இல்லை என்று அம்​மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு கொல்​கத்தா உள்​ளிட்ட 142 தொகு​தி​களில் நேற்று நடை​பெற்​றது. தனது சொந்​தத் தொகு​தி​யான பவானிபூரில் வாக்​களித்த பிறகு, ஊடகத்​திற்கு அளித்த பிரத்​யேகப் பேட்​டி​யில் மம்தா பானர்ஜி கூறிய​தாவது: மாநிலத்​தின் பல்​வேறு இடங்​களி​லிருந்து தடியடிச் சம்​பவங்​கள் குறித்து புகார்​கள் வந்​துள்​ளன.

நீதி​மன்ற உத்​தர​வு​களை மீறி திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​கள் பலரை மத்​தி​யப் படை​யினர் தடுத்து வைத்​துள்​ளனர். எந்​தவொரு வாக்​குச்​சாவடி​யிலும் மாநிலக் காவல்​துறை பணி​யில் அமர்த்​தப்​பட​வில்​லை. அனைத்து வாக்​குச்​சாவடிகளை​யும் மத்​தி​யப் படை​யினரே தங்​களது கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​துள்​ளனர். மக்​களைத் துன்​புறுத்​து​வது​தான் இவர்​களது வேலை​யா? இவ்​வாறு முதல்வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​தார்.

இதற்​கிடை​யில், முதல்​வர் மம்​தா​வின் மரு​மகன் அபிஷேக் பானர்​ஜி​யின் தொகு​தி​யான டைமண்ட் ஹார்​பரில் உள்ள சில வாக்​குச்​சாவடிகளில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மாற்​றப்​பட்​டுள்​ள​தாக பாஜக புகார் தெரி​வித்​தது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்​குப்​ப​திவு நிறுத்​தப்​பட்​டது. ஆனால், தோல்வி பயத்​தால் பாஜக வீண் வதந்​தி​களைப் பரப்​புவ​தாக திரிண​மூல் காங்​கிரஸ்​ தரப்​பு மறுப்​பு தெரிவித்​துள்​ளது.

SCROLL FOR NEXT