அமைச்​சர் சத்​ய கு​மார் யாதவ்

 
இந்தியா

திருமலையில் பிரசாதங்கள், குடிநீரின் தரத்தை அறிய அதிநவீன உணவு பரிசோதனை இயந்திரம்

ஆந்திர அமைச்சர் சத்யகுமார் யாதவ் தகவல்

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: திருமலையில் பிரசாதங்கள் மற்றும் குடிநீரின் தரத்தை அறிய அதிநவீன இயந்திரத்தை ரூ.3.5 கோடி செலவில் பிரான்ஸ் நாட்டில் இருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் இறக்குமதி செய்ய உள்ளது.

இது குறித்து ஆந்​திர சுகா​தா​ரம் மற்​றும் உணவுத்​துறை அமைச்​சர் சத்​ய கு​மார் யாதவ் ஹைத​ரா​பாத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​மலை​யில் அதிநவீன உணவுப் பரிசோதனைக் கூடம் அமைக்​கப்பட உள்​ளது. இதற்​காக 12,000 சதுர அடி​யில் இடம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த இடத்​தில் 2 அடுக்கு கட்டிடம் கட்​டப்பட உள்​ளது.

          

இது தொடர்​பாக ஆந்​திர அரசு கடந்த 2024, அக்​டோபர் 8ம் தேதி, தேசிய உணவுப் பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யத்​துடன் (எஃப்​எஸ்​எஸ்​ஏஐ) ஒப்​பந்​தம் செய்து கொண்​டது. இதற்​காக இத்துறை ரூ.23 கோடி மானி​யம் வழங்​கியது. இந்த பரிசோதனை கூடத்​தில் 50 அதிநவீன இயந்​திரங்​கள் பொருத்​தப்பட உள்​ளன. இதில் செயற்கை நாக்கு மற்​றும் மூக்கு இடம்​பெறும். பிரசாதத்திற்கு பயன்​படும் நெய் உள்​ளிட்ட பொருட்​களின் சிறு வாசனை வேறு​பாட்​டைக் ​கூட இக்​கருவி கண்​டறிந்து விடும்.

நோய்த்​தொற்று கிரு​மிகள், பூச்​சி மருந்து கலப்​படம் உள்​ளி்ட்​ட​வற்றை கண்​டறிந்து எச்​சரிக்கை செய்​யும். 200 வகை​யான பரிசோதனை​களை இந்த இயந்​திரம் மேற்​கொள்​ளும். நெய், முந்திரி, பருப்​பு, ஏலக்​காய், சர்க்​கரை, குடிநீர் என அனைத்து உணவுப் பொருட்​களின் தரத்​தை​யும் துல்​லிய​மாக கண்​டறி​யும். இம்​மை​யத்​தில் சுகா​தார துறை​யில் இருந்து 40 ஊழியர்​கள் பணியில் அமர்த்​தப்பட உள்​ளனர். இது வரும் மே மாதம் செயல்பாட்​டுக்கு வரும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரம் பக்தர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT