இந்தியா

வங்கிகளில் உள்ளூர் மொழி: அறிக்கை அளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ‘பங்​களா போக்கோ சாரிடபிள் ட்ரஸ்ட்’ என்ற தொண்டு நிறு​வனம் கொல்கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​தது. அதில், வங்​கி​கள் ரிசர்வ் வங்​கி​யின் சுற்​றறிக்​கையை கடைபிடிக்​க​வும், மேற்கு வங்​கத்​தில் உள்ள அனைத்து கிளை​களி​லும் பிராந்​திய மொழி​யான வங்​காள மொழியைப் பயன்​படுத்​த​வும் உத்​தர​விட் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆங்​கிலம், இந்தி மற்​றும் சம்​பந்​தப்​பட்ட பிராந்​திய மொழி பயன்​பாடு குறித்து எஸ்​பிஐ உள்​ளிட்ட சில வங்​கி​கள் ஏற்​கெனவே தங்​களது அறிக்​கைகளை தாக்​கல் செய்​துள்​ள​ன. இந்நிலையில், இன்​னும் அறிக்​கைகளை தாக்​கல் செய்​யாத வங்​கி​கள் உடனடியாக அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சுஜோய் பால் தலை​மையி​லான டிவிஷன் பெஞ்ச் உத்​தர​விட்​டது.

SCROLL FOR NEXT