இந்தியா

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல்: 15 மாநகராட்சியிலும் பாஜக அமோகம்

செய்திப்பிரிவு

மேசனா: குஜராத் மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு கடந்த 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவியது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாநிலத்தில் உள்ள 15 மாநகராட்சிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில் மேசனா மாநகராட்சியில் வார்டு எண் 13-ல் போட்டியிட்ட வரும் பாஜகவின் மாவட்ட அலுவலகத்தில் (கமலம்) சாதாரண உதவியாளராக பணியாற்றியவருமான ரமேஷ் பாய் பெற்ற வெற்றிதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாஜக மாவட்ட அலு​வல​கத்​தில் கட்​சித் தலை​வர்​களுக்கு தேநீர் வழங்​கு​வது மற்​றும் கோப்​பு​களைப் பராமரிப்​பது போன்ற பணிகளில் இருந்​து, தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒரு கவுன்​சில​ராக அவர் மாறி​யிருப்​பது, வட குஜ​ராத்​தில் அடிமட்ட அரசி​யல் முன்னேற்​றத்​தின் அடை​யாள​மாக மாறி​யுள்​ளது.

இது குறித்து ரமேஷ்​பாய் கூறும்​போது "நாங்​கள் மிக​வும் மகிழ்ச்சியாக இருக்​கிறோம். பிரதமர் நரேந்​திர மோடி தலைமையின் கீழ், வளர்ச்​சியை நோக்​க​மாகக் கொண்டு பணியாற்​று​வேன். நான் 28 ஆண்​டு​களுக்​கும் மேலாக உதவியாளராகப் பணி​யாற்​றினேன்" என்​றார்.

இந்​தத் தேர்​தலில், மோர்​பி மாநகராட்சியில் மொத்​தம் உள்ள 52 இடங்​களி​லும் பாஜக வெற்றி பெற்​றுள்​ளது. காங்​கிரஸ், ஆம் ஆத்​மிக்கு ஓர் இடம் கூட கிடைக்​க​வில்​லை. இதன்​மூலம்​ எதிர்க்கட்சிகளே இல்​லாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT