சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதி யாசிர்

 
இந்தியா

காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி யாசிர் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்​மு-​காஷ்மீரின் பிர் பஞ்​சால் மலைத் தொடரை கடந்து தீவிர​வா​தி​கள் குழு ஒன்று செல்​வ​தாக, பாது​காப்​புப் படை​யினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் ஆஷ்தர்’ தொடங்​கப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக நேற்​று​ முன்​தினம் நடை​பெற்ற துப்​பாக்​கிச் சண்​டை​யில் தீவிர​வாதி யாசிர் கொல்​லப்​பட்​டார். மற்​றொரு லஷ்கர் தீவிர​வா​தி​யான மூசா​வைத் தேடும்​ பணி தொடர்ந்​து நடை​பெற்​று வருகிறது.

கொல்​லப்​பட்ட யாசிர் தடை செய்​யப்​பட்ட லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​புடன் தொடர்​புடைய​வர் என்று ஜம்மு காஷ்மீர் போலீ​ஸார் தெரி​வித்​தனர். கடந்த 2024-ம் ஆண்​டில் நடை​பெற்ற 3 முக்​கிய தீவிர​வாதத் தாக்​குதல்​களில் அவருக்கு தொடர்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

குறிப்​பாக, 2024 மே 4-ம் தேதி பூஞ்ச் பகு​தி​யில் உள்ள ஷாஹ்சி​தார் அரு​கே, சனாய் டாப் பகு​தி​யில் உள்ள தளத்​துக்​குத் திரும்​பிக் கொண்​டிருந்த விமானப்​படை​யினரின் வாக​னங்​கள் மீது தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். இதில் விமானப்​படை வீரர் ஒரு​வர் உயி​ரிழந்​தார்.

SCROLL FOR NEXT