இந்தியா

நண்பரிடம் வாங்கிய ரூ.1,000 கடனை ரூ.25,000 ஆக திருப்பித் தந்த கேரளவாசி

செய்திப்பிரிவு

திரு​வனந்​த​புரம்: கேரளாவைச் சேர்ந்த இஸ்​மா​யிலும் தெலங்கானா மாநிலம் ஜெக்​டி​யால் மாவட்​டம் தர்​மபுரியைச் சேர்ந்த லச்​சன்​னா​வும் 1991-ல் சவூதி அரேபி​யா​வில் வேலை செய்யும்​போது நண்​பர்​களாகி உள்​ளனர்.

அந்​தக் கால​கட்​டத்​தில், லச்​சன்​னா​விட​மிருந்து இஸ்​மா​யில் 120 சவூதி ரியால்​களைக் (ரூ.1,000) கடனாகப் பெற்​றிருந்​தார். அதன்பின் சில நாட்​களி​லேயே லச்​சன்னா இந்​தியா திரும்​பி​னார். அக்​காலத்​தில் செல்​போன்​களோ அல்​லது சமூக ஊடகங்​களோ இல்​லாத​தால், நாளடை​வில் இரு​வருக்​கும் இடையே எந்​தத் தொடர்பும் இல்​லாமல் போனது. தொகை சிறிய​தாக இருந்​தா​லும், இஸ்​மா​யில் அதை மறக்​க​வில்​லை.

சமீபத்​தில், அவர் தனது பழைய நண்​பரைக் கண்​டு​பிடித்து பணத்தைத் திருப்​பித்தர முடிவு செய்​தார். ஆனால், அவரிடம் லச்சன்​னா​வின் தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட எந்​த விவரங்களும் இல்​லை.

நண்பரின் ஊர் பெயரை மட்​டுமே வைத்துக்​கொண்​டு, இஸ்​மா​யில் அந்த நகரத்​தைக் கண்​டறிந்து அங்கு பயணம் செய்​தார். உள்​ளூர் மக்​களின் உதவியைக் கேட்​டு, ஒரு​வழி​யாகத் தனது நண்​பரின் குடும்​பத்​தாரை சந்​தித்த இஸ்மாயில், அவர்​களிடம் ரூ.25,000 பணத்தை ஒப்​படைத்​தார்.

அந்த சமயத்​தில் லச்​சன்னா வளை​குடா நாட்​டில் வேலை செய்து கொண்​டிருந்​த​தால், இரு​வரும் வாட்​ஸ்​அப் வீடியோ கால் மூலம் பேசிக்​கொண்​டனர். 35 ஆண்டுக்கு பின் சுமார் 35 ஆண்​டு​களுக்கு முன்பு தான் கொடுத்த வெறும் ரூ.1,000 கடனுக்​காக, இஸ்​மா​யில் ரூ.25,000 பணத்​தைத் திருப்​பிக் கொடுத்​தது தனக்கு பெரும் ஆச்சரி​யத்தை ஏற்​படுத்​தி​ய​தாக லச்​சன்னா கூறி​னார்.

இஸ்​மா​யிலை ஒரு நேர்​மை​யான, நல்ல உள்ளம் படைத்த மனிதர் என்று பாராட்​டிய அவர், இந்​தச் செயல் அவர்​களின் நட்​பின் வலிமை​யைப் பிர​திபலிக்​கிறது என்​றும், இத்​தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தனது வாக்​குறு​தி​யைக் காப்பாற்றியதற்​காக அவருக்​கு நன்​றி என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT