இந்தியா

ஜேபிஎஸ்சி தேர்வுகள் ரத்துக்கு இடைக்கால தடை: ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்​தரவு

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (ஜேபிஎஸ்சி) சார்​பில் கடந்த ஏப்​ரல் 19-ம் தேதி சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வு நடத்​தப்​பட்​டது. இதன் முடிவு​கள் கடந்த ஜூலை 2-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. இதில் 2,204 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். அவர்​களுக்​கான முதன்மை தேர்வு கடந்த ஜூலை 18, 19, 20-ம் தேதி​களில் நடை​பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்​தத் தேர்​வின் விடைத்​தாள்​களில் முறை​கேடு​கள் செய்​யப்​பட்​டிருப்​ப​தாக புகார்​கள் எழுந்​தன. இந்த விவகாரம் தொடர்​பாக கடந்த ஜூலை 25-ம் தேதி தலைநகர் ராஞ்​சி​யில் மாணவ, மாண​வியர் தொடர் போராட்​டத்தை தொடங்​கினர். ஜேபிஎஸ்சி மட்​டுமன்றி ஜேஎஸ்​எஸ்சி நடத்​திய போட்​டித் தேர்வுகளி​லும் முறை​கேடு​கள் நடை​பெற்​றிருப்​ப​தாக மாணவ, மாணவியர் குற்​றம் சாட்​டினர்.

இதைத் தொடர்ந்து இரு அமைப்​பு​களும் நடத்​திய 22 போட்​டித் தேர்​வு​களை ஜார்க்​கண்ட் அரசு கடந்த 17-ம் தேதி ரத்து செய்​தது. ரத்து செய்​யப்​பட்ட 22 போட்​டித் தேர்​வு​கள் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட 2,394 அதி​காரி​கள், அலு​வலர்​கள் ஜார்க்​கண்ட் அரசின் பல்​வேறு துறை​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​கள் அனை​வரும் வேலை​யிழப்பை சந்​திக்​கும் சூழல் உரு​வாகி உள்​ளது.

இதைத் தொடர்ந்து ஜேபிஎஸ்சி நடத்​திய 11-வது, 13-வது சிவில் சர்​வீஸ் போட்​டித் தேர்​வு​களில் வெற்றி பெற்று தற்​போது பணி​யில் இருக்​கும் அலு​வலர்​கள் சார்​பில் மாநில உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி தீபக் ரோஷன் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது 11-வது, 13-வது சிவில் சர்​வீஸ் போட்​டித் தேர்​வு​கள் ரத்​துக்கு இடைக்​கால தடை விதிக்​கப்​பட்​டது. மேலும் வழக்கு தொடர்​பாக விரி​வான விளக்​கம் அளிக்​கும்​படி மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுஉள்ளது.

இதுதொடர்​பாக வழக்​கின் மனு​தா​ரர்​கள் கூறிய​தாவது: மொத்​தம் 22 போட்​டித் தேர்​வு​கள் ரத்து செய்​யப்​பட்டு உள்​ளன. இதனால் 2,394 பேர் வேலை​யிழக்க உள்​ளனர். இதில் 342 பேர் மூத்த அதிகாரி​கள் ஆவர். அவர்​களில் 207 பேர் தலை​மைச் செயலக அதிகாரி​களாக​வும், 35 பேர் காவல் துறை அதி​காரி​களா​வும் 56 பேர் நிதித் துறை அதி​காரி​களாக​வும், 44 பேர் பல்​வேறு துறைகளின் மூத்த அதி​காரி​களாக​வும் பணி​யாற்றி வருகின்றனர்.

முதல்​கட்​ட​மாக 11-வது, 13-வது சிவில் சர்​வீஸ் தேர்​வில் தேர்ச்சி பெற்​றவர்​கள் சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்பட்டு உள்​ளது. ஜார்க்​கண்ட் அரசு துறை​களில் ஏற்கெனவே ஏராள​மான பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.

தற்​போது ஒரே நேரத்​தில் 2,000-க்​கும் மேற்​பட்ட அரசு அலு​வலர்​கள் பணிநீக்​கம் செய்​யப்​பட்​டால் அரசு நிர்​வாகம் ஒட்​டுமொத்​த​மாக ஸ்தம்​பிக்​கும். இந்த சூழலை உணர்ந்தே இரு போட்​டித் தேர்​வு​கள் ரத்​துக்கு உயர் நீதி​மன்​றம் தடை விதித்​திருக்​கிறது. இவ்​வாறு மனுதா​ரர்​கள் தெரி​வித்​தனர். போட்​டித் தேர்வு முறை​கேடு​கள் தொடர்​பாக தலைநகர் ராஞ்​சி​யில் மாணவ, மாண​வியர் நேற்று 26-வது நாளாக போராட்​டத்தை தொடர்ந்​தனர்.

SCROLL FOR NEXT