இந்தியா

அமெரிக்க எம்​.பி.க்​களு​டன் ஜெய்​சங்​கர் சந்​திப்பு: வர்த்​தகம், பாதுகாப்பு தொடர்​பாக முக்​கிய ஆலோ​சனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்ள அமெரிக்க நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் (எம்​.பி.க்​கள்) குழு​வினரை மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்.ஜெய்​சங்​கர் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

இரு நாடுகளுக்கு இடையில் வர்த்​தகம் மற்​றும் பாது​காப்பு தொடர்​பாக இந்​தச் சந்​திப்​பின்​போது விரி​வான ஆலோசனை நடத்​தப்​பட்​டது. அமெரிக்க எம்​.பி.க்​கள் ஜிம்மி பாட்​ரோனிஸ், மைக் ரோஜர்ஸ் மற்​றும் ஆடம் ஸ்மித் ஆகியோர் அடங்​கிய இந்​தக் குழு​வினருடன் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்​கத் தூதர் செர்​ஜியோ கோரும் பங்​கேற்​றார்.

          

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் அமைச்​சர் ஜெய்​சங்​கர் பதி​விட்​டுள்​ள​தாவது: அமெரிக்க எம்​.பி.க்​களு​ட​னான பேச்​சு​வார்த்தை மிக​வும் சிறப்​பாக அமைந்​தது. இந்​தியா - அமெரிக்கா இடையி​லான பல்​வேறு உறவு​கள், இந்​தோ-பசிபிக் பிராந்​திய நில​வரம் மற்​றும் உக்​ரைன் போர் ஆகியவை குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. இரு நாடு​களுக்கு இடையி​லான உறவில் அமெரிக்க நாடாளு​மன்​றத்​துட​னான தொடர்​பு​கள் எப்​போதும் முக்​கிய அங்​க​மாக இருந்து வரு​கின்​றன. இவ்​வாறு அவர் பதி​விட்​டுள்​ளார்.

அமெரிக்​கத் தூதர் செர்​ஜியோ கோர் வெளி​யிட்ட பதி​வில், “பாது​காப்​பு, வர்த்​தகம் மற்​றும் முக்​கிய தொழில்​நுட்​பங்​கள் ஆகிய​வற்​றில் ஒத்​துழைப்பு வழங்​கு​வதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்​படுத்​து​வது குறித்து ஆக்​கப்​பூர்​வ​மான வகை​யில் விவா​திக்​கப்​பட்​டது” எனத் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தி​யா-அமெரிக்கா இடையே நிலு​வை​யில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் குறித்து பேச்​சு​வார்த்​தைகள் தீவிரமடைந்து வரும் நிலை​யில், இந்த எம்​.பி.க்​கள் குழு​வின் வருகை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT