பிரதிநித்துவப் படம்

 
இந்தியா

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் நிதி திரட்டிய ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாகிஸ்​தானின் ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிர​வாத அமைப்பு இந்​தி​யா​வில் மீண்டும் தாக்​குதல் நடத்​து​வதற்கு நிதி திரட்​டியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து புலனாய்வுத் துறை வட்​டாரங்கள் கூறிய​தாவது: டெல்லி செங்​கோட்டை கார்​குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய​வர்​கள் என சந்​தேகிக்​கப்​படும் 10 மருத்​து​வர்​கள் கைது செய்​யப்​பட்டு அவர்​களிடம் விசா​ரணை நடைபெறு​கிறது.

ஆபரேஷன் சிந்​தூருக்​குப் பிறகு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்பு தீவிர​வாத பெண்​கள் பிரிவை உரு​வாக்​கி​யுள்​ளது. இதற்கு மசூத் அசா​ரின் சகோதரி சதியா என்​பவர் தலை​வ​ராக செயல்​பட்டு வரு​கிறார். டெல்லி செங்​கோட்டை கார்​குண்டு தாக்​குதலில் கைதான முக்​கிய சந்​தேகத்​துக்​குரிய நபரான தீவிர​வா​தி​களால் ‘மேடம் சர்​ஜன்' என்று அழைக்​கப்​படும் பெண் மருத்​து​வர் ஷாகின் சயீத் இந்​தி​யா​ மீதான தாக்​குதலுக்கு நிதி வழங்​கும் பொறுப்​பாள​ராக இருந்​திருக்​கலாம் என்று நம்​பப்​படு​கிறது.

இந்நிலையில், இந்​தி​யா​வில் பல்​வேறு இடங்​களில் மீண்டும் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்ட அவர்​கள், அதற்​கான நிதியை பாகிஸ்​தானிலிருந்து திரட்​டி​யுள்​ளனர். பாகிஸ்​தான் ரூபாய் மதிப்​பில் ரூ.20,000 (இந்​திய மதிப்​பில் ரூ.6,400) திரட்டியது தெரியவந்துள்ளது. இவ்​வாறு அந்​த வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

SCROLL FOR NEXT