இந்தியா

ஜெய்ஷ் தீவிரவாதியைத் திருமணம் செய்வதற்காக பாகிஸ்தான் செல்ல இருந்த ஜெய்ப்பூர் பெண்

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்​பூரை சேர்ந்த பபிதா தாகர் (எ) கதீஜா (38) என்ற பெண்ணை ராஜஸ்​தான் தீவிர​வாத எதிர்ப்​புப்படை (ஏடிஎஸ்) போலீ​ஸார் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை கைது செய்​தனர்.

இதுகுறித்து ஏடிஎஸ் அதி​காரி​கள் கூறிய​தாவது: ஜெய்ப்பூரில் பெற்றோருடன் வசித்த பபி​தாவுக்​கு, பாகிஸ்​தானின் ஜெய்​ஷ்-இ-​முகமது தீவிரவாத அமைப்​பினருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரது மின்​னணு சாதனங்​களில் நடத்​தப்​பட்ட தடய​வியல் ஆய்வில் பல பாகிஸ்​தான் தொலைபேசி எண்​கள் கண்டறியப்பட்டன. அவற்​றில், ஜெய்​ஷ் தலை​வர் மசூத் அசா​ரின் நெருங்​கிய உறவின​ரான யூசுப் அசார் மற்​றும் இந்​தி​யா​வில் பல்வேறு குற்​றங்​களுக்​காகத் தேடப்​படும் காரி ஜரார் ஆகியோ​ரின் எண்​களும் அடங்​கும்.

பபிதாவின் பேஸ்​புக், மெஸஞ்​சர், வாட்​ஸ்​ அப் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்​குகளை ஆய்வு செய்த​தில், பல பாகிஸ்தானியர்​கள் மற்​றும் ஜெய்​ஷ் அமைப்​பினருடன் அவர் தொடர்​பில் இருந்​தது தெரிய ​வந்​தது. ஒரு கட்​டத்​தில் ஜெய்​ஷ்-இ-​முகமது தலை​வரும் நெருங்​கிய கூட்​டாளி​யு​மான கமாண்​டர் அபு உபை​தாவுடன் நெருக்​க​மா​னார். பபி​தாவை திரு​மணம் செய்து கொள்ள அபுஉபைதா விரும்​பி​னார்.

திரு​மணம் செய்​து​கொள்​ள​வும் ஜெய்​ஷ்-இ-​முகம்​மது அமைப்​பில் பணி​யாற்​ற​வும் பபிதா பாகிஸ்​தானுக்கு அழைக்​கப்​பட்​டார். நேபாளம், சவுதி அரேபியா அல்​லது ஐக்​கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தான் வர அவருக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டு உள்​ளது. பபிதா பாகிஸ்​தான் செல்​லத் தயா​ராகிக் கொண்​டிருந்​த​போது கைது செய்​யப்​பட்​டார்​. இவ்​வாறு ஏடிஎஸ்​ அதி​காரிகள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT