இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: முப்படை தலைமை தளபதி சவுகான் கருத்து

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ​மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்​களை தகவ​மைத்​துக்​கொள்ள இந்​தி​யப் பாது​காப்பு படைகள் உறு​திபூண்​டுள்​ள​தாக முப்​படை தலை​மைத் தளபதி அனில் சவு​கான் தெரி​வித்​துள்​ளார்.

தெலங்​கானா மாநிலம் துண்​டிகல் அருகே உள்ள விமானப் படை அகாட​மி​யில் நடை​பெற்ற 216-வது பயிற்​சிப் பிரி​வின் ஒருங்​கிணைந்த பட்​டமளிப்பு அணிவகுப்​பில் நேற்று கலந்​து​ கொண்டு உரை​யாற்​றிய சவு​கான் கூறிய​தாவது: போர் மற்​றும் போரிடும் செயல்​முறை தற்​போது ஒரு பெரிய புரட்​சி​யின் விளிம்​பில் உள்​ளது. இந்த நிலை​யில், இந்​திய பாது​காப்புப் படைகள் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்​களை தகவ​மைத்​துக் கொள்​வதற்​கும், சீர்​திருத்​தங்​களை உள்​வாங்​கிக் கொள்​வதற்​கும் உறு​திபூண்​டுள்​ளன.

இந்​தி​யா​வின் வலிமை​யானது உறு​தி​யான நிறு​வனங்​கள், ஜனநாயக நிலைத்​தன்மை மற்​றும் நமது ஆயுதப்​படைகளின் அசைக்க முடி​யாத திறனைச் சார்ந்து உள்​ளது. நமது பாது​காப்புப் படை செயல்​பாடு​களின் தீவிரம் குறைந்​திருக்​கலாம். ஆனால், ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் தொடர்​கிறது. புதி​தாகப் பயிற்சி பெற்ற அதி​காரி​கள் ஆயுதப் படைகளின் ஆழமான மாற்​றத்​தின் ஒரு கால​கட்​டத்​தில் இந்​திய விமானப்​படை​யில் நுழைகிறார்​கள்.

ஒருங்​கிணைந்த கட்​டமைப்​பு​கள், கூட்டு நடவடிக்​கைகள் மற்​றும் தேசத்​தின் தற்​சார்பு இந்​தியா முயற்சி ஆகியவை நமது ராணுவ வலிமை​யின் எதிர்​காலத்தை வடிவ​மைப்​ப​தில் முக்​கிய கூறுகளாக உள்​ளன.

பழைய களங்​களில் நடை​பெறும் போர்​கள் எப்​போதும் சவாலானவை​யாக​வும், பெரும்​பாலும் கொடூரம் நிறைந்​தவை​யாக​வும் இருக்​கும்.

ஆனால், புதிய களங்​களில் போர்​கள் என்​பது புத்​தி​சாலித் தனமானவை யாக​வும், வேக​மானவையாக​வும், அறி​வு, புதுமை மற்​றும் முன்​முயற்​சி​யால் வடிவ​மைக்​கப் பட்​ட​வை​யாக​வும் இருக்​கும். இந்த புதிய எல்​லைகளில் தேர்ச்​சி​யுறும் படை​தான் எதிர்​கால மோதல்​களில் வெற்​றி​பெற அதிக வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு சவு​கான்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT