இந்தியா

எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எ​போலா வைரஸால் பாதிக்​கப்​பட்​டுள்ள காங்கோ நாட்​டுக்​கு மருந்​துகள், கருவி​கள் உள்​ளிட்​ட​வற்றை இந்​தியா அனுப்​பி​யுள்​ளது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்​ளிட்ட ஆப்​பிரிக்க நாடு​களில் எபோலா வைரஸ் பரவல் அதி​கரித்து வரும் நிலை​யில், உலகளா​விய சுகா​தார நெருக்​கடி நிலையை உலகச் சுகா​தார நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. காங்கோ நாட்​டில் 2018 முதல் 2020 வரை எபோலா வைரஸ் அதிக அளவில் பரவி சுமார் 2,300 பேர் உயி​ரிழந்​தனர்.

விலங்​கு​களிடம் இருந்து மனிதர்​களுக்கு எளி​தில் பரவக்​கூடிய ‘பண்​டிபுக்​யோ’ என்​னும் ஓர் அரிய வகை எபோலா வைரஸ், கடுமை​யான குரு​திப்​போக்கு காய்ச்​சல் ஏற்​படுத்​தக்​கூடியது என்ப​தால், தற்​போது தீவிர​மான நோயாக எபோலா கருதப்படுகிறது.

இந்​நிலை​யில் எபோலா வைரஸ் மீண்​டும் பரவி பலர் உயிரிழந்துள்​ளனர். இதைத் தொடர்ந்து எபோலா​வால் பாதிக்கப்பட்​டுள்ள காங்கோ நாட்​டுக்​குத் தேவை​யான மருந்துகள், கருவி​கள் உள்​ளிட்​ட​வற்றை இந்​தியா அனுப்பியுள்ளது.

இது தொடர்​பாக ஆப்​பிரிக்க நோய் கட்​டுப்​பாட்டு மற்​றும் தடுப்பு மையங்​கள் (ஆப்​பிரிக்கா சிடிசி) வெளி​யிட்​டுள்ள சமூக ஊடகச் செய்​தி​யில் கூறி​யுள்​ள​தாவது: இந்​தியா அனுப்​பியுள்ள எபோலா வைரஸுக்​கான மருந்​துகள், மருத்​து​வக் கருவி​கள் உகாண்​டா​விலுள்ள மருத்​துவ மையத்​துக்கு வந்து சேர்ந்​துள்​ளன. அங்​கிருந்து ஆப்​பிரிக்க நோய் கட்​டுப்​பாட்டு மற்​றும் தடுப்பு மையத்​துக்கு இந்த மருந்​துகள் விரை​வில் வந்து சேரும்.

இங்​கிருந்து பாதிக்​கப்​பட்​டுள்ள டிஆர் காங்கோ பகு​தி​களுக்கு அவை கொண்டு சேர்க்​கப்​பட்டு பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு வழங்கப்​படும். இந்த இக்​கட்​டான நேரத்​தில் உதவி​யுள்ள இந்​திய அரசுக்கும், இந்​திய மக்​களுக்​கும் ஆப்​பிரிக்கா சிடிசி நன்றி தெரிவித்​துக் கொள்​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT