இந்தியா

தி ஹேக் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தி ஹேக் நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம் சிந்து நதி நீர் தொடர்​பாக பிறப்​பித்​துள்ள உத்​தரவை இந்தியா திட்​ட​வட்​ட​மாக நிராகரிக்​கிறது. இந்த விவ​காரத்​தில் தீர்ப்​பளிக்க அல்​லது தலையிட அந்த அமைப்​புக்கு எவ்​வித சட்​டப்​பூர்வ அதி​கார வரம்பும் இல்​லை.

சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்​தின் விதி​களுக்​குப் புறம்​பாக, உலக வங்கியால் சட்​ட​விரோத​மாக அமைக்​கப்​பட்ட இந்த நடு​வர் நீதி​மன்​றத்​தின் செயல்​பாடு​களை​யோ, அதன் தீர்ப்​பு​களையோ இந்தியா ஒரு​போதும் அங்​கீகரித்​தது இல்​லை.

எனவே, இந்த நீதி​மன்​றத்​தில் இந்​தியா ஆஜராக​வும் இல்​லை; அதன் முந்​தைய அறிவிப்​பு​களை ஏற்​றுக் கொள்​ள​வும் இல்​லை.

இந்​தி​யா​வின் இறை​யாண்மை சார்ந்த முடிவு​கள் குறித்து கருத்து தெரிவிக்​கவோ அல்​லது தீர்ப்​பளிக்​கவோ இந்த நடு​வர் மன்றத்துக்கு எந்த உரிமை​யும் இல்​லை. சிந்து நதி நீர் ஒப்​பந்​தத்தை நிறுத்தி வைப்​ப​தாக இந்​தியா எடுத்த முடிவு தொடர்ந்து அமலில் இருக்​கும்.

SCROLL FOR NEXT