இந்தியா

கேரள முதல்வரும், ஆளுநரும் உடன்படாவிட்டால் பல்கலை. துணைவேந்தரை நாங்களே நியமிப்போம்: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கேரள மாநிலத்​தின் இரு பல்​கலைக்​கழகங்​களுக்கு துணைவேந்​தர் நியமிக்​கும் விவ​காரத்​தில் முதல்​வரும், ஆளுநரும் உடன்​ப​டா​விட்​டால் உச்ச நீதி​மன்​றமே துணைவேந்​தரை நியமிக்​கும் என்று நீதிப​தி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

கேரள மாநிலத்​தின் ஏபிஜெ அப்​துல் கலாம் தொழில்​நுட்ப பல்​கலைக்கழகம், கேரள எண்ம அறி​வியல் பல்​கலைக்​கழகம் ஆகிய​வற்​றுக்கு துணைவேந்​தர்​களை நியமிக்​கும் தேடு​தல்​-தேர்வு குழு தலை​வ​ராக முன்​னாள் நீதிபதி சுதான்ஷு துலி​யாவை உச்ச நீதி​மன்​றம் நியமித்து உத்​தர​விட்​டிருந்​தது.

இந்த 2 பல்​கலைக்​கழகங்​களுக்​கும் துணை வேந்​தர்​கள் பெயர்​களை முன்​னாள் நீதிபதி சுதான்ஷு துலியா பரிந்​துரைத்​தும், வேந்​த​ரான கேரள ஆளுநர் செய்​யும் தாமதம் தொடர்​பான கேரள அரசின் மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.பி. பார்​தி​வாலா, பி.பி. வார்லே அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது.

இரு தரப்பு வாதங்​களுக்கு பிறகு, கேரளத்​தின் இரு பல்​கலைக்​கழகங்​களுக்கு துணைவேந்​தர் நியமிக்​கும் விவ​காரத்​தில் முதல்​வரும், ஆளுநரும் உடன்​ப​டா​விட்​டால் உச்ச நீதி​மன்​றமே துணைவேந்​தர்​களை நியமிக்​கும் என்று நீதிப​தி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT