இந்தியா

வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க இந்திய விமானப்படை, சென்னை ஐஐடி ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

பெங்களூரு: ​வான் தகவல் தொடர்பு கருவி​களை தயாரிக்க இந்​திய விமானப்​படை, சென்னை ஐஐடி​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

விமானப்​படை பயன்​பாட்​டுக்​காக உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் வான் தகவல் தொடர்பு கருவி​களை தயாரிக்க முடிவு செய்​யப்​பட்​டது. இதற்​காக விமானப்​படை​யின் மென்​பொருள் மேம்​பாட்டு மையம் (எஸ்​டிஐ) ஐஐடி சென்​னை​யுடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

பாது​காப்பு தொழில்​நுட்​பத்​தில் தற்​சார்பு நிலையை ஏற்​படுத்​து​வ​தி​லும், தற்​சார்பு இந்​தியா தொலைநோக்கை நனவாக்​கு​வ​தி​லும் இந்த ஒப்​பந்​தம் மிக முக்​கிய​மான நடவடிக்​கை. இந்த ஒப்​பந்​தத்​தில் விமானப்​படை​யின் எஸ்​டிஐ பிரிவு கமாண்​டன்ட் ஏர் வைஸ் மார்​ஷல் குருஹரி, ஐஐடி சென்னை இயக்​குனர் டாக்​டர் காமகோடி, பிர​வர்​தக் டெக்​னாலஜிஸ் பவுண்​டேசன் சிஇஓ டாக்​டர். சங்​கர் ராமன் ஆகியோர் கையெழுத்​திட்​டனர். இந்த கூட்டு முயற்சி மூலம் இந்​திய விமானப்​படை மேம்​பட்ட எண்​கணித முறை​களை உரு​வாக்க திட்​ட​மிட்​டுள்​ளது. இது நெட்​வொர்க்​கிங் மற்​றும் எண்​குறி​யாக்​கம் ஆகிய​வற்​றுக்கு பயன்​படும்.

இந்த அமைப்​பு, பாது​காப்​பான, நம்​பக​மான மற்​றும் சிறந்த தரவு பரி​மாற்​றத்​துக்​கும், நவீன ராணுவ செயல்​பாடு​களுக்​கும் முக்​கிய​மானது. உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் இந்த தகவல் தொடர்பை உரு​வாக்​கு​வதன் மூலம், வெளி​நாட்டு தகவல் தொடர்பு சாதனங்​களை சார்ந்​திருப்​பது குறை​யும்.

இது குறித்து விமானப்​படை கமாண்​டன்ட் குருஹரி கூறுகை​யில், ‘‘சென்னை ஐஐடியுட​னான இந்த கூட்டு முயற்​சி, பாது​காப்பு தகவல் தொழில்​நுட்​பத்​தில் தற்​சார்பு நிலையை ஏற்​படுத்​தும் தொலைநோக்கு நடவடிக்​கை. கல்​வி​யாளர்​களும், விமானப்​படை நிபுணத்​தவ​மும் ஒன்​றிணை​யும்​போது, அது உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் புது​மை​யான கண்​டு​பிடிப்​பு​களுக்கு வழி​வகுக்​கும். இதன் மூலம் விமானப்​படை​யின் வான் தகவல் தொடர்பு மேம்​படும்’’ என்​றார்.

ஐஐடி சென்னை இயக்​குனர் காமகோடி கூறுகை​யில், ‘‘ விமானப்​படை​யின் மென்​பொருள் மேம்​பாட்டு மையத்​துடன் இணைந்து செயல்​படு​வது, உயர் கல்வி நிறு​வனங்​களும், பாது​காப்பு படைகளும் இணைந்து செயல்​படு​வதற்கு உதா​ரண​மாக உள்​ளது. மேம்​பட்ட தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் பர்​பாது​காப்​புக்கு தனது நிபுணத்​து​வத்தை வழங்​கு​வ​தில் ஐஐடி சென்னை பெரு​மிதம் கொள்​கிறது. இந்த நடவடிக்​கை, தற்​சார்பு இந்​தி​யா, நாட்​டின் நவீன தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்​துத்​தல் போன்​றவற்​றுக்கு பொருத்​த​மாக உள்​ளது. இதன் மூலம் நாட்​டின்​ பாது​காப்​பு வலுப்​பெறும்’’ என்​றார்​.

ரூ.79,000 கோடியில் தளவாடம் வாங்க ஒப்புதல்: ராணுவ கொள்​முதல் கவுன்​சில் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் முப்​படைகளுக்​கும் தேவை​யான ராணுவத் தளவாடங்​களை ரூ.79,000 கோடிக்கு கொள்​முதல் செய்ய ஒப்​புதல் வழங்​கப்​பட்​டன. இதன்​படி தரைப்​படை பயன்​பாட்​டுக்​காக தற்​கொலை ட்ரோன்​கள், இலகு ரக ரேடார்​கள், பினாகா ராக்​கெட் லாஞ்​சருக்​கான குண்​டு​கள், ட்ரோன்​களை கண்​டறிந்து இடைமறித்து தாக்​கும் ஆயுதங்​களு​டன் கூடிய எம்​கே-எச் வாக​னங்​கள் ஆகிய வாங்​கப்​படும்.

இந்​திய கடற்​படை பயன்​பாட்​டுக்​காக போலார்டு இழுவைபடகு​கள், ரேடியோ தகவல் தொடர்பு கருவி​கள் வாங்​க​வும், அதிக உயரத்​தில் தொலை தூரம் பறக்​கும் ட்ரோன்​களை குத்​தகைக்கு எடுக்​க​வும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளன. விமானப்​படை பயன்​பாட்​டுக்கு தானி​யங்கி டேக் -ஆப் மற்​றும் லேண்​டிங் ரிக்​கார்​டிங் கருவி​கள், அஸ்த்ரா ஏவு​கணை​கள், தேஜஸ் போர் விமான சிமுலேட்​டர், ஸ்பைஸ் - 1000 ஏவு​கணை​கள்​ ஆகிய​வை வாங்​கப்​பட​வுள்​ளன.

SCROLL FOR NEXT