இந்தியா

அமெரிக்காவில் தொடரும் எச்-1பி விசா பணிநீக்கம்: 60 நாளில் வேறு வேலை தேடாவிட்டால் வெளியேறும் கட்டாயத்தில் இந்தியர்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் எச்-1 விசா அடிப்​படை​யில் பணிபுரி​யும் ஐ.டி.ஊழியர்​கள் தொடர்ந்து பணிநீக்​கம் செய்​யப்​படு​வ​தால், 60 நாட்​களுக்​குள் வேறு வேலை தேடிக்​கொள்​ளா​விட்​டால் நாட்​டை​விட்டு வெளி​யேற வேண்​டிய கட்​டா​யத்​துக்கு தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

அமெரிக்​கா​வின் சிலிக்​கான் வேலியை உலுக்கி வரும் அடுத்​தடுத்த பணிநீக்க அலைகள், அங்​குள்ள இந்​திய தொழில்​நுட்ப வல்​லுநர்​களின் எதிர்​காலத்​தைக் கேள்விக்​குறி​யாக்​கி​யுள்​ளது.

குறிப்​பாக, மெட்டா நிறு​வனம் தனது முதலீடு​களைச் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) பக்​கம் திருப்பி உள்​ளது. இந்​நிலை​யில், சுமார் 8,000 ஊழியர்​களை திடீரென பணிநீக்​கம் செய்​துள்ள விவ​காரம் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அமெரிக்காவில் பணிபுரி​யும் பெரும்​பாலான இந்​தி​யர்​கள் எச்​-1பி விசாவை நம்​பியே உள்​ளனர். தற்​போதைய அமெரிக்க விதி​களின்​படி, வேலை​யிழந்த 60 நாட்​களுக்​குள் புதிய ஸ்பான்​சருடன் கூடிய வேலை​யைக் கண்​டறிய வேண்​டும்; தவறி​னால் நாட்டை விட்டு வெளி​யேற வேண்​டும்.

நிறு​வனங்​கள் ஆட்​குறைப்பு செய்து வரும் சூழலில், இரண்டு மாதங்​களுக்​குள் புதிய வேலை தேடு​வது இந்​திய ஊழியர்​களுக்கு மிகக் கடுமை​யான சவாலாக மாறி​யுள்​ளது.

கால அவகாசத்தை நீட்​டிக்க பல ஊழியர்​கள் தற்​காலிக​மாக 'விசிட்​டர் விசா'வுக்கு (பி-2 விசா) மாற முயன்​றாலும், தற்​போதைய அமெரிக்க குடிவர​வுத் துறை (யுஎஸ்​சிஐஎஸ்) இந்த விண்​ணப்​பங்​களை மிகக் கடுமை​யான ஆய்​வுக்கு உட்​படுத்தி வரு​கிறது.

இதனால், அங்கு பல ஆண்​டு​களாக வீடு வாங்​கி, குடும்​பத்​துடன் வசித்து வரும் இந்​தி​யர்​கள், தங்​களின் கிரீன் கார்டு கனவு கலைந்து ஒரே இரவில் தாயகம் திரும்ப வேண்​டிய கட்​டா​யத்​துக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

தொடர் விசா அலைக்​கழிப்​பு​கள் மற்​றும் ஏஐ-ஆல் ஏற்​படும் வேலை​வாய்ப்பு மாற்​றங்​கள் காரண​மாக, அமெரிக்​கா​வில் உள்ள பாதிக்​கும் மேற்​பட்ட இந்​திய நிபுணர்​கள் மீண்​டும் இந்​தி​யா​வுக்கே திரும்ப அல்​லது கனடா, ஐரோப்பா போன்ற நாடு​களுக்​குச் செல்​வது பற்றி ஆலோ​சித்து வரு​கின்​றனர்.

ஒரு காலத்​தில் வேலை வாய்ப்​புக்​கான சொர்க்​க​மாகப் பார்க்​கப்​பட்ட அமெரிக்​கா, இன்று இந்​திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு தர்மசங்கடமான வாழ்வாதாரப் போராட்டக் களமாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT