இந்தியா

“வலிமையான புதிய அசாம் உருவாகும்” - கவுரவ் கோகோய் தகவல்

செய்திப்பிரிவு

ஜோர்ஹாட்: அ​சாம் தேர்​தலில் நேற்று வாக்​களித்த மாநில காங்​கிரஸ் தலை​வர் கவுரவ் கோகோய், தேர்​தலுக்​குப் பிறகு வலிமை​யான புதிய அசாம் உரு​வாகும் என்று தெரி​வித்​தார்.

அசாம் சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக நேற்று தேர்​தல் நடை​பெற்​றது. இதில், காங்​கிரஸ் கட்​சி​யின் மாநில தலை​வர் கவுரவ் கோகோய், ஜோர்​ஹாட் நகரில் உள்ள ஒரு வாக்​குச் சாவடி​யில் தனது தாயார் டாலி கோகோ​யுடன் சென்று வாக்​களித்​தார்.

          

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “மாநிலத்​தின் எதிர்​காலத்​துக்​காக மக்​கள் ஒரு தீர்க்​க​மான பங்கு வகிக்​கப் போகிறார்​கள். தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட பிறகு வலிமை​யான, அச்​சமற்ற, தன்​னம்​பிக்கை கொண்ட மற்​றும் புதிய அசாம் உரு​வாகும். மாநிலத்​தில் அமைய​விருக்​கும் புதிய அரசு அனைத்து மக்​களின் ஜனநாயக உரிமை​களை​யும் கருத்​துச் சுதந்​திரத்​தை​யும் பாது​காக்​கும்” என்​றார்.

இப்​போது அசாம் மாநிலம் ஜோர்​ஹாட் மக்​களவை தொகுதி உறுப்​பின​ராக உள்ள கவுரவ் கோகோய், மக்​களவை காங்​கிரஸ் துணைத்​தலை​வ​ராக​வும் பதவி வகிக்​கிறார். இந்​நிலை​யில், இவர் ஜோர்​ஹாட் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யிலும் போட்​டி​யிடு​கிறார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

முன்​ன​தாக, அனைத்து வாக்​காளர்​களும் பெரு​மள​வில் வந்​து, தங்​களின் எதிர்​காலத்​தைப் பாது​காப்​ப​தற்​கான அரசி​யலமைப்பு உரிமை​களைப் பயன்​படுத்த வேண்​டும் என்று அவர் தனது முகநூல் பக்​கத்​தில்​ வேண்​டு​கோள்​ விடுத்​தார்​.

SCROLL FOR NEXT