இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் ரூ.48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் ரூ.48 கோடி மதிப்​பிலான கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தாய்​லாந்​தில் இருந்து விமானம் மூலம் டெல்​லிக்கு போதைப் பொருள் கடத்தி வரு​வ​தாக சுங்​கத் துறை அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்​ளது. இதன் அடிப்​படை​யில் நேற்று டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​திறங்​கிய பயணி​களின் உடமை​களை சுங்​கத் துறை அதி​காரி​கள் சோதனை செய்​தனர்.

அப்​போது, பாங்​காக்​கில் இருந்து வந்த 2 தாய்​லாந்து நாட்​ட​வரிடம் சுமார் ரூ.48 கோடி மதிப்​புள்ள ஹைட்​ரோ​போனிக் கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர். பறி​முதல் செய்​யப்​பட்ட மொத்​தப் பொருட்​களில், சுமார் 29 கிலோ எடை​யுள்ள 4 பாக்​கெட்​கள் ஒரு பயணி​யின் பையில் இருந்​தும், சுமார் 19 கிலோ எடை​யுள்ள 2 பாக்​கெட்​கள் 2-வது பயணி​யின் பையில் இருந்​தும் மீட்​கப்​பட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

பறி​முதல் செய்​யப்​பட்ட போதைப் பொருளின் மொத்த எடை 47.805 கிலோ. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.48 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. சமீபகாலங்​களில் நடத்​தப்​பட்ட மிகப்​பெரிய போதைப் பொருள் வேட்​டைகளில் ஒன்​றாக இது கருதப்​படு​கிறது. ஹைட்​ரோ​போனிக் என்​பது மண்​ணுக்​குப் பதிலாக, ஊட்​டச்​சத்​துகள் நிறைந்த நீரில் வளர்க்​கப்​படும் வீரி​யம் மிக்​க ஒரு வகை​யான கஞ்​சா ஆகும்​.

SCROLL FOR NEXT