இந்தியா

முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்ட திரட்டப்படும் நிதி திருடப்படுவதாக சைபர் கிரைமில் புகார்

ஹுமாயூன் கபீருக்கு கொலை மிரட்டல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தின் முர்​ஷி​தா​பாத் மாவட்​டம் பரத்​பூர் தொகுதி எம்​எல்ஏ ஹுமாயூன் கபீர். திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்த இவர் தனது மாவட்​டத்​தில், அயோத்​தி​யில் இடிக்​கப்​பட்ட பாபர் மசூதி போன்று புதிய மசூதி கட்​டும் முயற்​சி​யில் இறங்​கி​னார். இதனால் இவர் திரிண​மூல் கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்​டார்.

மசூதி கட்​டு​வதற்​காக ஹுமாயூன் கபீர் ஓர் அறக்​கட்​டளை தொடங்​கி​யுள்​ளார். இதன் வங்​கிக் கணக்​கில் பல்​வேறு பகு​தி​களில் இருந்து நிதி டெபாசிட் செய்​யப்​படு​கிறது.

இந்​நிலை​யில் இந்த தொகை பிறகு வேறு வங்​கிக் கணக்​கிற்கு மாற்​றப்​படு​வ​தாக மேற்கு வங்க சைபர் கிரைம் போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அறக்​கட்​டளை​யின் பொருளாளர் அமீன்ல் ஷேக் கூறும்​போது, ‘‘மசூதி நிதிக்​காக நாங்​கள் வெளி​யிட்​டுள்ள க்யூஆர் கோடு மர்ம நபர்​களால் நகல் எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக சந்​தேகம் உள்​ளது. இந்த போலி குறி​யீட்​டின் உதவி​யால் பணம் வசூலிக்​கப்​படு​கிறது’’ என்​றார்.

இதற்​கிடையே பாபர் பெயரில் மசூதி கட்​டு​வ​தால், தனக்கு கொலை மிரட்​டல் வந்​துள்​ள​தாக ஹுமாயூன் கபீர் புகார் அளித்​துள்​ளார். இந்​தப் புகாரின் அடிப்​படை​யில் தனக்கு பாது​காப்பை அதி​கரிக்க வேண்​டும் என்று மேற்கு வங்க அரசு, மத்​திய அரசு மற்​றும் காவல்​துறைக்கு கோரிக்கை விடுத்​துள்​ளார். மேலும் நீதி​மன்​றம் மூல​மாக மத்​திய படைகளின் பாது​காப்பை கோரப் போவ​தாக அவர் கூறி​யுள்​ளார்.

முஸ்​லிம்​களுக்​காக டிசம்​பர் 22-ல் தனிக் கட்சி தொடங்​க​விருப்​ப​தாக​வும் ஹுமாயூன் கபீர் அறி​வித்​துள்​ளார்.

‘‘எதிர்​வரும் மேற்கு வங்க தேர்​தலில் முஸ்​லிம் வாக்​கு​களால் எனது கட்சி 90 தொகு​தி​களில் வெற்றி பெறும். மீத​முள்ள 204 தொகு​தி​களில் திரிண​மூல், காங்​கிரஸ், பாஜக என யார் வென்​றாலும் எங்​கள் ஆதர​வின்றி யாரும் ஆட்சி அமைக்க முடி​யாது” என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT