இந்தியா

கிரிப்டோ சூதாட்டத்தில் ஈடுபட ஐ.நா.வில் பணியாற்றியவர் ரூ.2 கோடி மோசடி

சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐ.​நா.​வில் இந்​தியாவின் சார்​பில் பணி​யாற்றி வந்​தவர் ரூ.2 கோடி மோசடி செய்​தது தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் ஐ.நா. அலு​வல​கம் உள்​ளது. இங்கு இந்​தி​யா​வின் நிரந்தர தூது​வர்​கள், அதி​காரி​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களில் மோகித் என்​பவர் கணக்கு அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தார். இவர் ஜெனீ​வா​வில் உள்ள ஐ.நா. அலு​வல​கத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் 17-ம் தேதி​ தான், உதவி பிரிவு அதி​காரி​யாக பணி​யில் சேர்ந்​தார்.

இங்கு உணவு, போக்​கு​வரத்து போன்ற பல்​வேறு பணி​களுக்கு வழங்க வேண்​டிய பணத்தை கையாளும் பொறுப்பு மோகித்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. அதன்​படி, யூனியன் பேங்க் ஆப் சுவிட்​சர்​லாந்து வங்​கி​யில் உள்ள இந்​திய கணக்​கில் இருந்து பல்​வேறு பணி​களுக்கு பணம் பட்​டு​வாடா செய்ய வேண்​டும். அந்த பணம் அமெரிக்க டால​ராக அல்​லது சுவிஸ் பிராங்க் கரன்​சி​யாக பரி​மாற்​றம் செய்​யப்​படும்.

பணம் வழங்க வேண்​டிய​வர்​களுக்கு கியூஆர் கோடு மூலம் இந்​திய வங்​கிக் கணக்​கில் இருந்து பணம் அனுப்பி வைக்​கப்​படு​வது வழக்​கம். இந்​நிலை​யில், பல்​வேறு பணி​களுக்​கான கியூஆர் கோடு​களில் மோகித் முறை​கேடு செய்​தது தணிக்​கை​யின்போது தெரிய வந்​தது.

விசா​ரணை​யில், கியூஆர் கோடு​களை மாற்​றி,தனது வங்​கிக் கணக்​கில் மோகித் பணம் பெற்று வந்​துள்​ளார். அப்​படி ரூ.2 கோடிக்கு மேல் அவர் பணம் கையாடல் செய்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதுகுறித்து சிபிஐ அதி​காரி​கள் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

முதல் கட்ட விசா​ரணை​யில், இந்​திய வங்​கிக் கணக்​கில் இருந்து எடுத்த பணத்தை மோகித் கிரிப்டோ சூதாட்​டத்​தில் செல​விட்​டது தெரிய வந்​துள்​ளது. பணத்தை கையாடல் செய்​ததை மோகித் ஒப்​புக் கொண்​டுள்​ளார். இதையடுத்து மோகித் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் உடனடி​யாக இந்​தி​யா​வுக்​கு திரும்​ப அழைக்​கப்​பட்​டனர்​. சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT