கோப்புப்படம்

 
இந்தியா

4 தீவிரவாதிகள் உட்பட 5 பேர் மணிப்பூர் மாநிலத்தில் கைது

செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தில் பாது​காப்​புப் படை​யினர் அவ்​வப்​போது சோதனை நடத்தி வரு​கின்றனர். இதுகுறித்து காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது:

இம்​பால் மேற்கு மாவட்​டத்​தில் 20-ம் தேதி நடத்​திய சோதனை​யில் தடை செய்​யப்​பட்ட மக்​கள் விடு​தலை ராணுவ அமைப்​பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிட​மிருந்து ஒரு துப்​பாக்​கி, அந்த அமைப்​பைச் சேர்ந்த சில ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்ட்​டன. அதே நாளில் இம்​பால் கிழக்கு மாவட்​டத்​தில் தடை செய்​யப்​பட்ட பிரெபக் அமைப்​பைச் சேர்ந்த ஒரு​வர் கைது செய்​யப்​பட்​டார். இவர்​கள் 4 பேர் மீதும் பொது​மக்​களை மிரட்டி பணம் பறித்​த​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது.

இது​போல, தவு​பால் மாவட்​டத்​தைச் சேர்ந்த ஒரு​வர் 21-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். அவரிடருந்​தும் துப்​பாக்கி உள்​ளிட்ட ஆயுதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT