டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர்.

 
இந்தியா

டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 3 சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் 4 மாடி கட்​டிடம் ஒன்​றில் நேற்று காலை ஏற்​பட்ட தீ விபத்​தில் 3 சிறுமிகள் உட்பட 9 பேர் உயி​ரிழந்​தனர். தகவல் அறிந்து பிரதமர் நரேந்​திர மோடி ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். அத்​துடன், இறந்​தவர்​களின் குடும்​பத்​துக்​குத் தலா ரூ.2 லட்​சம் நிவாரணம் அறி​வித்​துள்​ளார்.

தென்​மேற்கு டெல்​லி, பாலம் ரயில் நிலை​யம் அரு​கில் ராம் சவுக் மார்க்​கெட் பகு​தி​யில் 4 மாடி கட்​டிடம் உள்​ளது. இதன் அடித்​தளம், தரை தளம் மற்​றும் முதல் தளத்​தில் ராஜேந்​தர் காஷ்யப் என்​பவர் துணி மற்​றும் அழகு சாதனப் பொருட்​கள் கடை நடத்தி வந்​துள்​ளார். கட்​டிடத்​தின் மேல் தளங்​களில் அவரது குடும்​பத்​தினர் வசித்து வந்​துள்​ளனர்.

          

இந்​நிலை​யில் இந்த கட்​டிடத்​தில் நேற்று காலை 7 மணி​யள​வில் பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. தகவலின் பேரில் தீயணைப்​புத் துறை​யினர் உள்​ளிட்ட மீட்​புப் படை​யினர் அங்கு விரைந்​தனர். சுமார் 30 தீயணைப்பு வாக​னங்​களைப் பயன்​படுத்தி தீயை அணைத்​தனர். மேலும் பலரை மீட்டு அருகில் உள்ள மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைத்​தனர்.

எனினும் இந்த தீ விபத்​தில் 3, 6, 15 வயதுடைய 3 சிறுமிகள் உட்பட 9 பேர் இறந்​த​தாக அறிவிக்​கப்​பட்​டனர். மேலும் 2 வயது சிறுமி உட்பட 3 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

கட்டிடத்தில் தீப்பற்றியதும் 2 பேர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். அவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தீ விபத்​தில் இறந்​தவர்​களுக்கு பிரதமர் மோடி இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியி​லிருந்து இறந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.2 லட்​சம் இழப்​பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 உதவித் தொகை​யும் வழங்​கப்​படும். காயம் அடைந்​தவர்​கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என அறி​வித்​துள்​ளார். மின் கசிவு காரண​மாக தீ விபத்து ஏற்​பட்​டிருக்​கலாம் என கருதப்​படு​கிறது. இதுகுறித்து முதல்​வர் ரேகா குப்தா வி​சா​ரணைக்​கு உத்​தர​விட்​டுள்​ளார்​.

ரூ.10 லட்சம் நிவாரணம்: தீயில் 9 பேர் உயி​ரிழந்​ததற்கு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்த முதல்​வர் ரேகா குப்​தா, உயி​ரிழந்த பெரிய​வர்​களின் குடும்​பங்​களுக்கு ரூ.10 லட்​சம்

நிவாரணம் வழங்​கப்​படும் என்​றும் சிறுமிகளின் குடும்​பங்​களுக்​குத் தலா ரூ.5 லட்​சம், காயம் அடைந்​தவர்​களுக்கு ரூ.2 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​படும் என்றும் முதல்​வர் ரேகா குப்தா அறிவித்தார்.

SCROLL FOR NEXT