இந்தியா

​கொல்கத்தா மருத்துவமனை கழிவறை​யில் பெண் செவிலியர் மர்ம மரணம்

செய்திப்பிரிவு

கொல்​கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனை​யில் பெண் செவிலியர் ஒரு​வரின் உடல் கழி​வறை​யில் இருந்து மீட்கப்பட்​டது.

கொல்​கத்​தா​வில் உள்ள நில்​ரத்​தன் சர்​கார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் ரூபாலி பர்​மன் (30) என்ற பெண் செவிலியராக பணிபுரிந்து வந்​தார். நேற்று முன்​தினம் இரவு கழி​வறைக்கு சென்ற அவர், நீண்ட நேர​மாக வெளி​யில் வரவில்​லை. இதுகுறித்து மருத்​து​வ​மனை ஊழியர்​கள் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, போலீ​ஸார் கதவை உடைத்து உள்ளே சென்​ற​போது ரூபாலி இறந்த நிலை​யில் இருந்​தார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக அனுப்பி வைக்​கப்​பட்​டது. இதுகுறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வருகின்றனர். இதற்​கிடையே, இச்​சம்​பவம் தொடர்​பாக சுகாதாரத் துறை​யும் தனி​யாக விசா​ரணை​யைத் தொடங்கியுள்ளது. இதற்​காக விசா​ரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT