இந்தியா

ஜபல்பூர் படகு விபத்து வீடியோவில் அதிர்ச்சி தகவல்: லைப் ஜாக்கெட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம்

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் ஜபல்​பூர் மாவட்​டத்​தி​லுள்ள பார்கி அணை​யில் 3 நாட்​களுக்கு முன்பு படகில் சுற்​றுலா சென்றபோது பலத்த காற்று வீசி​ய​தில் படகு கவிழ்ந்​தது. இதில், தமிழகத்​தைச் சேர்ந்த 5 பேர் உட்பட சுற்​றுலாப் பயணி​கள் 9 பேர் உயி​ரிழந்​தனர். 28 பேர் மீட்​கப்​பட்​டனர்.

இது தொடர்​பாக புதிய வீடியோ ஒன்று வெளி​யாகி​யுள்​ளது. இதன் மூலம், படகுப் பயணங்​களின்போது செய்ய வேண்​டிய அடிப்​படை விதி​களைக் கூட அந்​தப் படகை இயக்​கிய ஊழியர்​கள் பின்​பற்​ற​வில்லை என்று தெரிய வந்​துள்​ளது.

இந்த விபத்​தில் தனது குழந்​தையை மார்​போடு இறுக அணைத்தபடி தாய் ஒரு​வர் சடல​மாக மீட்​கப்​பட்​டார். இந்​தக் காட்சி கல்​நெஞ்​சங்​களை​யும் உருக்​கு​வ​தாக அமைந்​துள்​ளது. மேலும், அந்த வீடியோ​வில் சீல் கூட பிரிக்​கப்​ப​டாத உயிர் காக்​கும் லைப் ஜாக்​கெட்​டு​கள் இருப்​பது தெரிய வந்​துள்​ளது. உயிரைக் காக்க உதவும் லைப்​-ஜாக்​கெட்​டு​களைப் பயணி​களுக்கு படகு ஊழியர்​கள் வழங்​க​வில்​லை.

வீடியோ​வில் சுற்​றுலாப் பயணி​கள் உயிர் பயத்​தில் கூச்​சலிடு​வதும், தப்​பிக்க முயல்​வதும் தெரி​கிறது. படகில் தண்​ணீர் புகுந்த பிறகு அவசர அவசர​மாக கட்டி வைத்​திருந்த லைப் ஜாக்​கெட்​டு​களை அவிழ்த்து பயணி​களுக்கு வழங்​கு​வது பதி​வாகி உள்​ளது. பயணி​கள் பலர் லைப் ஜாக்​கெட்​டு​கள் அணி​யாமல் அலறு​வதும் தெரி​கிறது.

சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை: அதிர்ச்சியில் மீளமுடியாத படகோட்டி - விபத்துக்குள்ளான படகை இயக்கிய பைலட் மகேஷ் படேல் கூறியதாவது:

அணை அமைந்துள்ள கமாரியா தீவில் இருந்து படகை எடுக்கும்போது வானிலை இயல்பாகவே இருந்தது. நடுப்பகுதிக்கு படகு சென்றபோது காற்று பலமாக வீச ஆரம்பித்ததும், படகு தள்ளாட ஆரம்பித்தது. காற்று அதிகரித்த நிலையில் படகின் உள்ளே தண்ணீர் வர ஆரம்பித்ததும், சுற்றுலா பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.

சுற்றுலாப் பயணிகளை காக்கும் நோக்கில் அந்த படகை கரைக்கு திருப்ப முயன்றேன். அப்போது எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து மாற்றுப் படகை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தேன். நடனம் ஆட வேண்டும் என்றும் அதற்கு லைப் ஜாக்கெட் தடையாக இருக்கும் என்றும் கூறி அதை வாங்க மறுத்தனர். நான் 15 ஆண்டுகளாகப் படகோட்டும் தொழிலில் இருந்து வருகிறேன்.

இதுபோன்ற பரிதாபமான விபத்தைச் சந்தித்ததே இல்லை. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை. குற்ற உணர்ச்சியால் சாப்பிட முடியவில்லை. தூக்கம் வரவில்லை. நடந்த தவறுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT