இந்தியா

மருமகள் ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங் கைது

மோகன் கணபதி

புதுடெல்லி: நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது.

ட்விஷா சர்மா மே 12-ம் தேதி, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்​டில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். இது தொடர்பாக மே 15-ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதே நாளில், போபால் விசாரணை நீதிமன்றம், கிரிபாலா சிங்குக்கு ஜாமின் வழங்கியது. அதேநேரத்தில், ட்விஷா சர்மாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிரிபாலா சிங்குக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு ரத்து செய்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா, “ட்விஷா சர்மா மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவரது மாமியாரான கிரிபாலா சிங் போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், அவர் மீது தீவிர குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதன் தீவிர தன்மையை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கத் தவறி உள்ளது. எனவே, கிரிபாலா சிங்குக்கு அளிக்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படுகிறது” என உத்தரிவிட்டார்.

இதையடுத்து, கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்கையில், ‘ட்விஷா சர்​மா​வின் மாமியாரும், ஓய்​வு ​பெற்ற கூடு​தல் மாவட்ட நீதிப​தி​யு​மான கிரிபாலா சிங், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் நடை​பெற்ற திரு​மணத்​தின்​ போது ரூ.2 லட்​சம் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்​தி​யுள்​ளார்.

இதன்​படி ரூ.2 லட்​சத்தை கொடுத்​துள்​ளனர். திரு​மணம் முடிந்த ஒரு சில மாதங்​களி​லேயே ட்விஷாவுக்கு அவரது கணவர் சமர்த் சிங் மற்​றும் மாமி​யார் கிரி​ பாலா சிங் ஆகியோ​ரால் கடுமை​யான மன உளைச்​சல் ஏற்பட்டுள்ளது.

மேலும், திரு​மணத்​துக்​குப் பிறகு ட்விஷா​வின் அடிப்​படை தேவைகளுக்​குக் கூட அவரது கணவரும் மாமி​யாரும் பணம் கொடுக்க மறுத்​துள்​ளனர். இதனால், ட்விஷா​வின் பெற்​றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT