இந்தியா

பிரபல சுற்றுச்சூழல் ஆய்வாளர் மாதவ் காட்கில் காலமானார்

செய்திப்பிரிவு

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த மாதவ் காட்கில் (83), ஒரு சூழலியல் ஆய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர். உடல்நலக்குறைவால் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் புதன்கிழமை நள்ளிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 2024-ல், மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த மிக முக்கியமான பணிக்காக, ஐ.நா. அவருக்கு 'சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' விருது வழங்கியது.

பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும், 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 'மேற்​குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு​வின்' தலை​வ​ராக​வும் இவர் பணி​யாற்றி உள்​ளார். இக்​குழு 'காட்​கில் குழு' என்று பிரபல​மாக அழைக்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT