இந்தியா

ம.பி.யில் ஆதிவாசி நலத்துறை மேலாளர் வீட்டில் ரூ.4.69 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

இந்தூர்: மத்​திய பிரதேச மாநிலம் தர் மாவட்​டம் லபாரியா கிராமத்​தைச் சேர்ந்​தவர் கோவர்​தன்​லால் மாரு (படேல்). இவர் மாநில ஆதி​வாசி ஜதி சேவா சஹா​காரி சமி​தி​யில் மேலா​ள​ராக பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், வரு​மானத்​துக்கு அதி​க​மாக இவர் சொத்து சேர்த்​துள்​ள​தாக ஏராள​மான புகார்​கள் எழுந்​தன.

இதையடுத்து இந்​தூரில் இருந்து லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நேற்று அதி​காலை 5.30 மணிக்கு திடீரென லபாரியா கிராமத்​துக்கு சென்​றனர். அதி​காரி​கள் 3 பிரி​வாக சென்று கோவர்​தன் லாலின் 2 மாடி வீடு, பண்ணை வீடு, கிடங்​கு, அலு​வல​கம், விவ​சாய நிலத்​தில் கட்​டப்​பட்​டிருந்த கட்​டிடங்​களில் ஒரே நேரத்​தில் தீவிர​மாக சோதனை நடத்​தினர்.

இந்த சோதனை அதி​காலை 5.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை 12 மணி நேரம் நடை​பெற்​றது. அப்​போது, இந்த சோதனை​யில் ரூ.4.69 கோடி மதிப்​புள்ள சொத்து ஆவணங்​கள், ரொக்கம் ரூ.2 லட்​சத்து 41,150, 145 கிராம் தங்​கம்,

1.23 கிலோ வெள்ளி ஆகியவை கைப்​பற்​றப்​பட்​டன. அத்​துடன், விலை​யுயர்ந்த மரச்​சா​மான்​கள், ரூ.16.98 லட்​சம் மதிப்​புள்ள மொபைல் போன்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

கோவர்​தன் லால் கடந்த 1984-ம் ஆண்டு சாதாரண விற்​பனை​யாள​ராக பணி​யாற்றி உள்​ளார். அப்​போது அவர் மாதம் ரூ.300 மட்​டுமே வரு​வாய் ஈட்​டி​யுள்​ளார். இது​வரை அவர் ஈட்​டிய வரு​வாய் மற்​றும் அவரது மூதாதையர்​கள் சொத்​தின் மதிப்பு இப்​போது ரூ.1.2 கோடி​யாக உள்​ளது. ஆனால், வரு​வாய்க்கு அதி​க​மாக அவரிடம் ரூ.4.69 கோடிக்கு சொத்​துகள் உள்ளன என்று அதி​காரி​கள் கூறினர். அத்​துடன் 8 ஏக்​கர் நில​மும் அவர் வைத்​துள்​ளார். சோதனை முடி​வில்​ முழு விவரங்​கள்​ தெரிய வரும்​ என்று லோக் ஆயுக்தா டிஎஸ்பி சுனில் தலான் தெரிவித்தார்​.

SCROLL FOR NEXT