ராகுல் காந்தி 
இந்தியா

ராகுல் மீது அவதூறு வழக்கு: ஜனவரி 17-க்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​திக்கு எதி​ரான அவதூறு வழக்​கின் விசா​ரணை வரும் ஜனவரி 17-ம் தேதிக்கு தள்ளி வைக்​கப்​பட்​டது.

மகா​ராஷ்டி​ரா​வில் நடந்த ஒரு நிகழ்ச்​சி​யில் மகாத்மா காந்தி படு​கொலைக்கு ஆர்​எஸ்​எஸ் அமைப்​பு​தான் காரணம் என காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்​சாட்​டின​ாா். இது தொடர்​பாக தானே மாவட்​டத்​தி​லுள்ள பிவாண்டி நீதி​மன்​றத்​தில் ஆர்​எஸ்​எஸ் தொண்​டர் ராஜேஷ் குந்தே, ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்​தார். அதில், காந்தி படு​கொலை குறித்து ராகுல் பொய்​யான தகவலை கூறி​யுள்​ள​தாகக் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்கு கூடு​தல் சிவில் நீதிபதி (இளநிலை பிரிவு) பி.எம். கோல்சே முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. இந்​நிலை​யில், பிணை தொடர்​பான நடை​முறைத் தேவை​களைப் பூர்த்தி செய்ய வேண்​டி​யிருப்​ப​தால், விசா​ரணையை வரும் ஜனவரி 17-ம் தேதிக்கு தள்ளி வைப்​ப​தாக நீதிபதி அறி​வித்​தார்.

இந்த வழக்​கில் ராகுலுக்கு பிணை நின்ற முன்​னாள் மத்​திய அமைச்​சரும், மக்​களவை முன்​னாள் சபா​நாயகரு​மான சிவ​ராஜ் பாட்​டீல் கடந்த 12-ம் தேதி கால​மா​னார். இதனால் புதிய பிணை​தா​ரரை ராகுல் நியமிக்க வேண்​டும் என்று நீதி​மன்​றம் கேட்​டுக்​கொண்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT