எம்எல்ஏ மைதிலி தாக்குர், அமைச்சர் மங்​கல் பாண்​டே

 
இந்தியா

பிஹார் மருத்துவமனை அவலம்: சொந்த கட்சி அமைச்சரிடம் பேரவையில் கேள்வி கேட்ட பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்குர்

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலம் தர்​பங்கா மாவட்​டம் அலிநகர் தொகுதியின் பாஜக சட்​டப்​பேரவை உறுப்​பினர் மைதிலி தாக்​குர், தனது தொகு​தி​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை மிக​வும் சிதிலமடைந்​துள்​ள​தாக சட்​டப்​பேர​வை​யில் கேள்வி எழுப்​பி​னார்.

இதற்கு பதிலளித்த சுகா​தா​ரத்​துறை அமைச்​சரும், பாஜக​வின் மூத்த தலை​வரு​மான மங்​கல் பாண்​டே, “மருத்​து​வ​மனைக் கட்டிடம் நல்ல நிலை​யில்தான் உள்​ளது. சிறிய பழுது​ பார்ப்​புப் பணி​கள் மட்​டுமே அதில் மேற்​கொள்ள வேண்​டி​யிருக்​கிறது” என்றார்.

          

அமைச்​சரின் இந்​தப் பதிலால் அதிருப்​தி​யடைந்த மைதிலி தாக்குர், அடுக்​கடுக்​கான துணை கேள்வி​களை எழுப்​பி​னார். அப்போது அவர் கூறுகை​யில் “அமைச்​சரின் பதில் எனக்கு முழுமை​யான திருப்​தியை அளிக்​க​வில்​லை.

நான் அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்​தேன். கட்​டிடம் மிக​வும் மோச​மான நிலை​யிலும் இடி​யும் தரு​வா​யிலும் உள்​ளது. ஆனால், கட்​டிடம் நன்​றாக இருப்​ப​தாக அமைச்​சர் கூறியது வியப்பாக இருக்​கிறது. எதார்த்த நிலைக்கு மாறாக அமைச்​சரின் பதில் உள்​ளது” என்றார்.

மேலும், அந்த மருத்​து​வ​மனை​யில் முன்பு இரண்டு எம்​பிபிஎஸ் மருத்​து​வர்​கள் பணி​யாற்றி வந்த நிலை​யில், தற்​போது ஆயுஷ் மருத்​து​வர் மட்​டுமே பணி​யில் உள்​ளதை​யும் அவர் சுட்​டிக்​காட்டினார்.

பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ஆகியோரின் கவனத்​தைப் பெற்ற இளம் தலை​வ​ரான மைதிலி தாக்​குர், தனது சிறு​வயது முதலே மங்​கல் பாண்​டேவை தமக்​குத் தெரி​யும் என்று குறிப்​பிட்​டதோடு, தொகு​தி​யின் நலன் கருதி அவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் வேண்​டு​கோள் விடுத்​தார்.

SCROLL FOR NEXT