இந்தியா

கேரளாவில் ரூ.3,000 குடும்பநல ஓய்வூதியம்: இடதுசாரி வாக்குறுதி

செய்திப்பிரிவு

கோழிக்கோடு: கேரளா​வில் ஆளும் இடது ஜனநாயக முன்​னணி சார்பில், முதல்வர் பின​ராயி விஜயன் தேர்​தல் அறிக்​கையை நேற்று வெளி​யிட்​டார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்​ப​தாவது: கேரளா​வில் ஏழ்மையை முற்​றி​லும் ஒழிக்க, குடும்ப நல ஓய்​வூ​தியம் ரூ.3,000 ஆக உயர்த்​தப்படும். இதன் மூலம் 5 லட்​சம் ஏழை குடும்​பங்​கள், வறுமையி​லிருந்து மீள உதவும். மக்​களுக்கு முறையாக மருத்​துவ வசதி​கள்கிடைப்​பதை உறுதி செய்ய முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படும்.

          

எஸ்​.டி பிரி​வினர், மீனவர்​கள், வறுமைக்​கோட்​டுக்கு கீழ் உள்​ளவர்​களின் நலன்​களில் சிறப்பு கவனம் செலுத்​தப்​படும். மாணவர்​கள் படித்து முடித்​தவுடன் வேலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்​கப்​படும். வேலை​வாய்ப்பு தொடர்​புடைய திறன் மேம்​பாட்டு பயிற்​சிகள் விரிவுபடுத்​தப்​படும்.

பெண்​களுக்​கான வேலை​வாய்ப்​பில் சிறப்பு கவனம் செலுத்​தப்​படும். பெண்​களின் பங்​களிப்பு 50 சதவீத​மாக உயர்த்​தப்​படும் என்பது உட்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT