இந்தியா

உ.பி.யில் லஞ்சப் பணத்தை நேர்மையாக பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த மாநகராட்சி கவுன்சிலர்கள்

கங்கை நீர் மீது சத்தியம் செய்து...

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜ​கான்​பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்​தி​யம் செய்​து, உறுதி மொழி எடுத்த ஒரு வீடியோ சமூக ஊடகங்​களில் வைரலாகி உள்ளது. லஞ்​ச​மாக கிடைக்​கும் பணத்தை தங்​களுக்​குள் நேர்மையாக பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக அவர்​கள் உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

அந்த வீடியோ​வில், ஒரு​வர் வாட்​டர் பாட்​டிலில் உள்ள கங்கை நீரை அங்​குள்ள மற்ற நபர்​களின் கைகளில் ஊற்​றுகிறார். அதன் பிறகு அவர் “மாநக​ராட்​சிக்கு கிடைக்​கும் பணம் 60 கவுன்​சிலர்​களுக்​கும் சமமாகப் பகிரப்​படும். குழு​வில் உள்ள யாருக்​காவது பிரச்​சினை ஏற்​பட்​டால், அனை​வரும் ஒற்​றுமை​யாக அவருக்கு ஆதர​வாக நிற்போம்” என சத்​தி​யம் செய்​கிறார்.

அதைத் தொடர்ந்து மற்ற அனை​வரும் அதே வாக்​கி​யங்​களை மீண்​டும் கூறி சத்​தி​யம் செய்​கின்​றனர். மேலும், அந்த வீடியோவில் சத்​தி​யத்தை மீறிய ஒரு​வரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்​பெற்​றுள்​ளது. இந்த வீடியோ கவுன்​சிலர்​கள் மீது ஊழல் குற்​றச்​சாட்​டு​களை கிளப்​பி​யுள்​ளது.

இது தொடர்​பாக மாநக​ராட்சி ஆணை​யர் சவும்யா குரு​ராணி அளித்த பேட்​டி​யில், “இந்த வீடியோ 2025 நவம்​பரில், முந்​தைய மாநக​ராட்சி ஆணை​யர் பதவி​யில் இருந்த காலத்​தில் பதிவு செய்யப்​பட்​ட​தாகத் தகவல் கிடைத்​துள்​ளது. அப்​படி​யிருந்​தா​லும், விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளோம். விசா​ரணை​ முடிவு​களின் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்​” என்றார்​.

SCROLL FOR NEXT