இந்தியா

“தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது காங்கிரஸ்” - அசாமில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: தேசவிரோத செயல்களில் ​காங்​கிரஸ் கட்சி ஈடு​படு​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி குற்​றம் சாட்டி உள்​ளார்.

இரு நாட்​கள் பயண​மாக பிரதமர் மோடி நேற்று முன்​தினம் அசாம் சென்​றார். முதல்​நாளில் குவாஹாட்டி சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் ரூ.4,000 கோடி​யில் கட்​டப்​பட்டு உள்ள புதிய முனை​யத்தை அவர் திறந்து வைத்​தார். இரண்​டாம் நாளான நேற்று குவாஹாட்​டி​யில் சொகுசு கப்​பல் ஒன்​றில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் 25 மாணவ, மாண​வியருடன் பிரதமர் நரேந்​திர மோடி கலந்​துரை​யாடி​னார். இதன்​பிறகு குவாஹாட்​டி​யில் உள்ள அசாம் போராட்ட தியாகி​கள் நினை​விடத்​தில் அவர் அஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்​னர் அசாமின் நம்​ரூப் பகு​தி​யில் ரூ.11,000 கோடி மதிப்​பிலான உரத் தொழிற்​சாலைக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். அங்கு நடை​பெற்ற விழா​வில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: அசாம், வடகிழக்​கில் புதிய அத்​தி​யா​யம் தொடங்கி உள்​ளது. அசாமில் செமி கண்​டக்​டர் ஆலை, புதிய தொழிற்​சாலைகள் தொடங்​கப்​பட்டு உள்​ளன. அசாம் மாநில வேளாண் துறைக்கு ஊக்​கம் அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

புதி​தாக தொடங்​கப்பட உள்ள உரத் தொழிற்​சாலை​யின் மூலம் ஆண்​டுக்கு 12 லட்​சம் மெட்​ரிக் டன் உரம் உற்​பத்தி செய்​யப்​படும். இதன்​மூலம் அசாம், வடகிழக்கு மாநிலங்​கள் முழு​வதும் பலன் அடை​யும். ஆயிரக்​கணக்​கானோருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். சுயதொழில் வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கும்.

மிக நீண்ட கால​மாக வடகிழக்கு மாநிலங்​களை சேர்ந்த விவ​சா​யிகள் பல்​வேறு இன்​னல்​களை அனுப​வித்து வந்​தனர். ஆனால் காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் அவர்​களின் நலனில் துளி​யும் அக்​கறை காட்​டப்​பட​வில்​லை. அசாமில் பாஜக ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு விவ​சா​யிகள் நலன் சார்ந்த திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. விவ​சா​யிகளின் அனைத்து பிரச்​சினை​களுக்​கும் தீர்வு காணப்​பட்டு வரு​கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு புள்​ளி​விவரத்​தின்​படி இந்​தி​யா​வில் ஓராண்​டில் 2.25 கோடி டன் யூரியா மட்​டுமே உற்​பத்தி செய்​யப்​பட்​டது. தற்​போது ஓராண்​டில் 3.06 கோடி டன் யூரியா உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. இதை 8 கோடி டன்​னாக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு இருக்​கிறது. ஒரு மூட்டை யூரி​யா​வின் விலை ரூ.3,000 ஆகும். இதை ரூ.300 என்ற விலை​யில் வழங்கி வரு​கிறோம்.

அசாம் பாடகர் பூபேன் அசா​ரி​கா​வுக்கு பாரத ரத்னா வழங்​கப்​பட்​டது. இதற்கு காங்​கிரஸ் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தது. எனது ஆரம்ப கால வாழ்க்​கை​யின்​போது தேநீர் விற்​பனை செய்​திருக்​கிறேன். இதன்​காரண​மாக அசாம் தேயிலை தோட்ட தொழிலா​ளர்​களின் நலனில் அதிக அக்​கறை செலுத்​துகிறேன்.

ஆனால் காங்​கிரஸ் கட்சி தொடர்ந்து தேச விரோத செயல்​களில் ஈடு​பட்டு வரு​கிறது. அந்த கட்சி ஆட்​சி​யில் இருந்​த​போது அசாமில் ஊடுரு​வல்​காரர்​களை குடியேற்​றியது. அவர்​களுக்கு நிலங்​களை தான​மாக வழங்​கியது. ஊடுரு​வல்​காரர்​களை வாக்கு வங்​கி​யாக காங்​கிரஸ் கருதுகிறது. எனவே இன்​றள​வும் ஊடுரு​வல்​காரர்​களுக்கு அந்த கட்சி ஆதரவு அளித்து வரு​கிறது.

தற்​போது பல்​வேறு மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. வங்​கதேச ஊடுரு​வல்​காரர்​களை காப்​பாற்ற எஸ்​ஐஆர் பணிக்கு காங்​கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவிக்​கிறது. வாக்கு வங்​கிக்​காக அந்த கட்சி விஷத்தை கக்கி வரு​கிறது. இதை தடுத்து அசாமை​யும் அசாம் மக்​களை​யும் பாஜக பாது​காக்​கும்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT