கவுரவ் கோ​காய்

 
இந்தியா

அசாம் பாஜக.வில் காங்கிரஸார் ஆதிக்கம்: காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாம் மாநில பாஜக​வில் சுயநலத்​திற்​காக கட்சி மாறிய முன்​னாள் காங்​கிரஸ் தலை​வர்​கள் குழுவே இப்​போது ஆதிக்​கம் செலுத்தி வரு​கிறது என மாநில காங்​கிரஸ் தலை​வரும், எம்​.பி.​யு​மான கவுரவ் கோ​காய் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: அசாம் மாநில பாஜகவை பொருத்​தவரை அது இன்​னொரு காங்​கிரஸ் கட்​சி​யாகவே மாறியுள்​ளது.

          

சுயநலத்​துடன் காங்​கிரஸ் கட்​சியி​லிருந்து விலகியவர்​கள் ​தான் அங்கு முக்​கிய பொறுப்​பு​களில் உள்​ளனர். என்​னைப் பொறுத்​தவரை இன்று நம் கண் முன்னே இருப்​பது ஹிமந்த பிஸ்வா சர்மா தலை​மையி​லான ஒரு காங்​கிரஸ். அதற்கு பாஜக என்ற லேபிள் மட்​டுமே ஒட்​டப்​பட்​டுள்​ளது.

மறைந்த முன்​னாள் முதல்​வர் தருண் கோகோய் ஆட்​சிக் காலத்தில் தவறு செய்த காங்​கிரஸ் தலை​வர்​கள் அனை​வரும் இப்போது பாஜக​வில் தஞ்​சம் புகுந்​துள்​ளனர்.

எனவே வரவிருக்​கும் தேர்​தல் தருண் கோகோய் வழி நடத்​திய காங்​கிரஸுக்​கும், ஹிமந்த பிஸ்வா சர்மா வழிநடத்​தும் காங்​கிரஸுக்​கும் இடையிலான போ​ராகவே இருக்​கும்.

அடல் பிஹாரி வாஜ்​பாய் பவனில் (பாஜக தலை​மையகம்) தற்போது குழு​மி​யுள்ள முன்​னாள் காங்​கிரஸ் தலை​வர்​கள் தங்களது குடும்​பத்​தின் சுயநலத்​துக்​காகவே அங்கு கடின​மாக உழைக்​கிறார்​கள்.

ஆனால், நாங்​கள் தருண் கோகோ​யின் லட்சியங்​களால் ஈர்க்​கப்​பட்ட உண்​மை​யான காங்​கிரஸை பிரதிநி​தித்​து​வப்​படுத்​துகிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அசாம் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்​கிரஸில் இருந்து முக்​கி​யத் தலைவர்கள் பாஜக​வில் இணைந்து வரு​வது அம்​மாநில அரசியலில் பெரும் பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT