இந்தியா

பாலியல் வன்கொடுமை புகாரில் கேரள காங். எம்எல்ஏ ராகுல் மம்​கூடத்​தில் கைது

தகுதி நீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவர் ஆலோசனை

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: ​பாலியல் வன்​கொடுமை புகாரில் காங்​கிரஸ் கட்சி எம்​எல்ஏ ராகுல் மம்​கூடத்​தில் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

கேரள மாநிலம் பாலக்​காடு காங்​கிரஸ் எம்​எல்​ஏ​வாக இருப்​பவர் ராகுல் மம்​கூடத்​தில். மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்​கள் கூறப்​பட்​டன. இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாலியல் புகார் வழக்கில் ராகுல் தலைமறைவானார்.

இந்​நிலை​யில், எம்​எல்ஏ ராகுல் மம்​கூடத்​தில் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக​வும், நிதி ரீதி​யாக சுரண்​டு​வ​தாக​வும் ஒரு பெண் இ-மெ​யில் மூலம் கேரள முதல்​வருக்கு புகார் அனுப்பினார். இது ராகுல் மீதான 3-வது புகார் ஆகும். இது குறித்து விசா​ரணை நடத்​து​மாறு, மாநில போலீஸ் டிஜிபிக்கு அரசு உத்தரவிட்​டது.

அதன்​பேரில் ராகுல் மீதான பாலியல் புகார் குறித்து விசா​ரிக்க அதி​காரி பூங்​குழலி தலை​மை​யில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்​பட்​டது. இந்​தக் குழு​வினர் பாலக்​காட்​டில் நேற்று காலை அவரை கைது செய்​து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதி​மன்​றக் காவலில் வைக்கப்பட்டார். இதனிடையே எம்​எல்ஏ பதவியிலிருந்து நீக்​கம் செய்​வது தொடர்​பாக சட்ட நிபுணர்​களின் ஆலோ​சனையை பேர​வைத் தலை​வர் ஏ.என்.ஷம்​சீர் கேட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக ஷம்​சீர் நேற்று கூறிய​தாவது: எம்​எல்ஏ ராகுல் மீது 3 பாலியல் புகார்​கள் வந்​துள்​ளன. எனவே, அவரை எம்​எல்ஏ பதவியி​லிருந்து தகுதி நீக்​கம் செய்​வது தொடர்​பாக சட்ட நிபுணர்களின் ஆலோ​சனையைக் கேட்​டுள்​ளேன். அதன் பிறகு இதுதொடர்​பாக முடி​வெடுக்​கப்​படும்​" என்று தெரி​வித்​தா​ர்​.

SCROLL FOR NEXT