இந்தியா

கர்நாடகாவில் இன்று சட்டமேலவை தேர்தல்: சொகுசு விடுதியில் காங்., மஜத‌ எம்எல்ஏக்கள் தங்கவைப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக சட்​டமேல​வை​யில் காலி​யாக உள்ள 7 இடங்​களுக்​கான தேர்​தல் இன்று நடை​பெறுகிறது. இதில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறு​வதற்கு 28 எம்​எல்​ஏக்​களின் வாக்​கு​கள் தேவைப்​படு​கின்​றன. தற்​போது உள்ள எம்​எல்​ஏக்​களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காங்​கிரஸ் 4 இடங்​களி​லும், பாஜக 2 இடங்களில் எளி​தாக‌ வெற்றி பெறும்.

மஜதவுக்கு 19 எம்​எல்​ஏக்​களின் வாக்​கு​களே இருக்​கும் நிலை​யில், அக்​கட்சி ஒரு வேட்​பாளரை நிறுத்​தி​யுள்​ளது. அதேவேளை​யில் காங்​கிரஸ் தங்​களது கட்​சி​யில் உபரியாக உள்ள 6 எம்​எல்​ஏக்​கள் மற்​றும் சுயேச்சை எம்​எல்​ஏக்​களின் வாக்​கு​களை குறி​வைத்து 5-வது வேட்​பாளரை நிறுத்​தி​யுள்​ளது. இந்​நிலை​யில் காங்​கிரஸ், மஜத எம்​எல்​ஏக்​கள் கட்சி மாறி வாக்​களிக்​கப் போவ​தாக தகவல் வெளி​யானது.

இதையடுத்து காங்​கிரஸ் மேலிடம் தங்​களது எம்​எல்​ஏக்​களை பெங்​களூருவை அடுத்​துள்ள பிட​தி​யில் சொகுசு விடு​தி​யில் தங்க வைத்​துள்​ளது. முதல்​வர் டி.கே.சிவகு​மார் தலை​மை​யில் நேற்று முன்​தினம் இரவு நடந்த எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில் முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமையா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் கட்சி மாறி வாக்​களிக்​கக் கூடாது என வலி​யுறுத்​தப்​பட்​டது. எம்எல்ஏக்​கள் தப்​பிச் செல்​லாமல் இருக்க பலத்த பாது​காப்பு போடப்​பட்டுள்​ளது.

இதே​போல மஜத எம்​எல்​ஏக்​கள் 19 பேரும் பெங்​களூரு​வில் ஒரு சொகுசு விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். அக்​கட்​சி​யின் தலை​வரும் மத்​திய அமைச்​சரு​மான குமார​சாமி நேற்று எம்​எல்​ஏக்​களை சந்​தித்துப் பேசினார். அப்​போது கட்சி மாறி வாக்​களிப்​போர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என எச்​சரித்​தார்.

இன்று சட்​டமேலவை வாக்​குப்​ப​திவு நடை​பெறு​வ​தால் இரு கட்சிகளின் எம்​எல்​ஏக்​களும் அவர்​கள் தங்​கி​யுள்ள‌ சொகுசு விடுதிகளில் இருந்து பேருந்​துகள் மூலம் நேரடி​யாக தலை​மைச் செயல​கத்​துக்கு பாதுகாப்புடன் அழைத்​து​வரப்பட உள்​ளனர்.

SCROLL FOR NEXT