இந்தியா

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில் கஜக போராட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் படித்து வந்த அபிஜித் தீப்கே என்ற இந்​திய மாணவர், கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்​கத்தை சமீபத்​தில் சமூக வலை​தளம் மூலம் தொடங்​கி​னார்.

இந்​தி​யா​வில் வேலை​யில்லா இளைஞர்​களைக் கரப்​பான் பூச்​சிகளு​டன் ஒப்​பிட்டு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்​துக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில் இந்த இயக்​கம் கிண்​டலாக தொடங்​கப்​பட்​டது. இதற்கு இளைஞர்​கள் மத்​தி​யில் ஆதரவு பெரு​கியது. இந்​நிலை​யில் இந்​தி​யா​வில் சமீபத்​திய தேர்வு குளறு​படிகளுக்கு எதி​ராக டெல்​லி​யில் ஜூன் 6-ம் தேதி போராட்​டம் நடை​பெறும் என இந்த அமைப்​பினர் அறி​வித்​தனர்.

இந்​தப் போராட்​டத்​தில் இணைந்து கொள்ள அமைப்​பின் நிறு​வனர் அபிஜித் தீப்கே நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்​தார். அமைதி வழி போராட்​டத்தை வலி​யுறுத்​திய அவர் நேராக போராட்​டக் களத்​துக்​குச் சென்​றார். டெல்லி ஜந்​தர் மந்​தரில் இந்த அமைப்​பின் உறுப்​பினர்​களும் ஆதர​வாளர்​களும் பெரு​மள​வில் திரண்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

நீட், சிபிஎஸ்இ, கியூட், எஸ்​எஸ்சி போன்ற தேர்​வு​கள் தொடர்​பான பிரச்​சினை​களுக்​காக, மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்று போராட்​டக்​காரர்​கள் முழக்​கமிட்​டனர். முன்​ன​தாக, ஆதர​வாளர்​கள் அமை​தி​யான முறை​யில் நடந்து கொள்ள வேண்​டும், எந்த மோதல்​களி​லும் ஈடு​படக் கூடாது என்று தீப்கே வேண்​டு​கோள் விடுத்​திருந்​தார்.

போராட்​டத்​தில் அபிஜித் தீப்கே பேசுகை​யில், “நண்​பர்​களே, இது ஒரு நீண்ட போராட்​டம். சமூக ஊடகங்​களில் நாம் அமைச்​சர் பிர​தானின் ராஜி​னா​மாவை கோரத் தொடங்கி ஒரு மாதம் ஆகி​விட்​டது. ஆனால் இந்த நபர்​கள் எவ்​வளவு வெட்​கமற்​றவர்​கள் என்​றால், நடவடிக்கை எடுப்​ப​தற்கு பதிலாக, நமது கணக்​கு​களை முடக்​கு​வது, பதிவு​களை நீக்​கு​வது போன்ற பிற திசை திருப்​பல்​களில் கவனம் செலுத்தி வரு​கின்​றனர். எங்​களது பதிவு​களை உங்​களால் நீக்க முடி​யும், ஆனால் இந்த இடத்​தில் இருந்து எங்​களை உங்​களால் அழிக்க முடி​யாது’’ என்​றார்.

இந்​தப் போராட்​டத்​துக்கு லடாக்கை சேர்ந்த சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் உள்​ளிட்ட பலர் ஏற்​கெனவே ஆதரவு தெரி​வித்​திருந்​தனர். இந்​நிலை​யில், சோனம் வாங்​சுக் நேற்று போராட்​டத்​தில் நேரில் பங்​கேற்​றார். மாலை​யில் அபிஜித் தீப்கே புறப்​பட்​டதை தொடர்ந்து நேற்​றைய போராட்​டம் முடிவுக்கு வந்​தது.

SCROLL FOR NEXT