இந்தியா

நீட் வினாத்தாளை கசியவிட்ட வேதியியல், தாவரவியல் பேராசிரியர்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் வினாத்​தாள் தயாரிக்​கும் குழு​வில் இடம்​பெற்றிருந்த வேதி​யியல், தாவர​வியல் பேராசிரியர்​கள் வினாத்​தாள் கசி​வின் முக்​கிய குற்​ற​வாளி​களாக அடை​யாளம் காணப்பட்டு உள்​ளனர்.

என்​டிஏ சார்​பில் நீட் நுழைவுத் தேர்​வுக்​கான வினாத்​தாளை தயாரிக்க நாடு முழு​வதும் இருந்து முன்​னணி பல்​கலைக்​கழகங்​களின் பேராசிரியர்​கள் தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். ஒவ்​வொரு​வரும் தலா 3 கேள்வி​களை வரையறுக்க வேண்​டும். அனைத்து பேராசிரியர்​களும் வழங்​கும் கேள்வி​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்டு செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தில் நீட் வினாத்​தாள் தயாரிக்​கப்​படும்.

எஸ்​பிஐ பாது​காப்பு பெட்​டகங்​கள்: ஒவ்​வொரு நீட் தேர்​வுக்​கும் இரு வகை​யான வினாத்​தாள்​கள் தயாரிக்​கப்​படும். இதில் பிர​தான வினாத்​தாள் அந்​தந்த மாநிலங்​களின் எஸ்​பிஐ வங்​கி​களின் பாது​காப்​புப் பெட்​டகங்​களில் வைக்​கப்​படும். இந்த வினாத்​தாளே தேர்​வின் போது வழங்​கப்​படும். மற்​றொரு வினாத்​தாள் கனரா வங்​கி​களின் பாது​காப்​புப் பெட்​டகங்​களில் வைக்​கப்​படும். ஒரு​வேளை தேர்​வுக்கு முன்​பாக வினாத்​தாள் கசிவு புகார் எழுந்​தால் இந்த வினாத்​தாள்​கள் தேர்​வின் போது வழங்​கப்​படும்.

கடந்த 3-ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்​வின் போது எஸ்​பிஐ வங்​கி​களின் பாது​காப்​புப் பெட்​டகங்​களில் வைக்​கப்​பட்​டிருந்த வினாத்​தாள்​கள் வழங்​கப்​பட்​டன. ஆனால் அன்​றைய தினம் மாலையே வினாத்​தாள் கசிவு தொடர்​பான புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பாக ராஜஸ்​தானின் சிகார் நகரில் செயல்​படும் நீட் பயிற்சி மையத்​தின் ஆசிரியர் ஒரு​வர் உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) அமைப்​புக்​கும் இ-மெ​யில் வாயி​லாக அவர் புகார் மனுவை அனுப்​பி​னார்.

இதுதொடர்​பாக ராஜஸ்​தான் தனிப்​படை போலீ​ஸாரும் மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களும் விசா​ரணை நடத்​தின. இதில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நாடு முழு​வதும் நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது.

இது​வரை 9 பேர் கைது: தற்​போது நீட் வினாத்​தாள் கசிவு குறித்து சிபிஐ வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. சிபிஐ விசா​ரணை​யில் இது​வரை 9 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

ராஜஸ்​தான் தலைநகர் ஜெய்ப்​பூரை சேர்ந்த தினேஷ் பிவால், அவரது தம்​பிகள் மங்​கிலால் பிவால், விகாஷ் பிவால் ஆகியோர் நீட் வினாத்​தாளை பல லட்​சங்​கள் விலைக்கு விற்​பனை செய்​துள்​ளனர். இவர்​கள் மூவரும் தங்​கள் குடும்​பத்​தில் எம்​பிபிஎஸ் பயிலும் உறவினர்​களுக்கு வினாத்​தாளை வழங்கி உள்​ளனர்.

மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரில் அழகு நிலை​யம் நடத்​தும் மணிஷா என்​பவர் கடந்த ஆண்டு தனது மகளை எம்​பிபிஎஸ் படிப்​பில் சேர்த்​தார். அப்​போது நீட் வினாத்​தாள் கசிவு கும்​பலுடன்

அவருக்கு தொடர்பு ஏற்​பட்​டது. இந்த ஆண்டு மணிஷாவுக்கு நீட் வினாத்​தாள் முன்​கூட்​டியே கிடைத்து அவரும் பல லட்​சங்​களுக்கு விற்​பனை செய்​திருக்​கிறார். அவர் கைது செய்​யப்பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரை சேர்ந்த சுபம் காரி​னார் மத்​திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். இவர் ஹரி​யா​னாவை சேர்ந்த பலருக்கு வினாத்​தாளை விற்​பனை செய்​திருக்​கிறார்.

மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த எம்​பிபிஎஸ் சேர்க்​கைக்​கான ஏஜென்ட் தனஞ்​செய் லோகாண்டே என்​பவர் நூற்​றுக்​கணக்​கானோருக்கு நீட் வினாத்​தாளை விற்​பனை செய்​துள்​ளார். அவரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார்.

ஹரி​யா​னா​வின் குரு​கி​ராமை சேர்ந்த ஆயுர்​வேத மருத்​துவ முதலாம் ஆண்டு மாணவர் யாஷ் யாத​வும் ஏராள​மானோருக்கு நீட் வினாத்​தாளை விற்​பனை செய்​திருக்​கிறார். இவர்​கள் மூல​மாக ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, ஹரி​யா​னா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, காஷ்மீர், பிஹார், டெல்​லி, உத்​த​ராகண்ட், கேரளா உட்பட பல்​வேறு மாநிலங்​களில் நீட் வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருக்​கிறது.

இந்த சூழலில் நீட் வினாத்​தாள் தயாரிப்பு குழு​வில் இடம்​பெற்​றிருந்த மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வேதி​யியல் பேராசிரியர் பி.​வி. குல்​கர்​னியை சிபிஐ அதி​காரி​கள் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். இதைத் தொடர்ந்து நீட் வினாத்​தாள் தயாரிப்பு குழு​வில் இடம்​பெற்​றிருந்த மகா​ராஷ்டிார​வின் புனே நகரை சேர்ந்த தாவர​வியல் பேராசிரியை மணிஷா குரு​நாத் நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

இந்த இரு பேராசிரியர்​கள் மூல​மாகவே நீட் வி​னாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இவர்​களுக்​கும் என்​டிஏ மூத்த அதி​காரி​கள் சிலருக்​கும் நெருங்கிய தொடர்​பு இருக்​கக்​ கூடும்​ என்​று சந்​தேகிக்​கப்​படு​கிறது. இதுதொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள்​ தீவிர வி​சாரணை நடத்​தி வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT