ஆந்​திர முதல்​வர் சந்திர​பாபு நாயுடு

 
இந்தியா

அமராவதியில் தேசிய கொடி ஏற்றினார் சந்திரபாபு நாயுடு

செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்​திர மாநிலம் அமராவ​தி​யில் நேற்று நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தேசி​யக் கொடியை ஏற்​றி​னார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது:

நம் வாழ்க்​கை​யில் இலட்​சி​யத்​தோடு வீறுநடை போட வேண்​டும். இந்​தி​யர்​களுக்​கும், உலகள​வில் வாழும் அனைத்​துத் தெலுங்கு மக்​களுக்​கும் எனது 80-வது சுதந்​திர தின நல்​வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நம் நாடு சுதந்​திரம் பெற, இந்​தத் தெலுங்கு மண்​ணில் பிறந்த தியாகி​கள் பலர் போராடி​யுள்​ளனர். பலரது தியாகத்​தின் பலனே இன்​றைய சுதந்​திர இந்​தி​யா. இதனை நாம் என்​றென்​றும் மறக்​கக் கூடாது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT