இந்தியா

பிஹாரில் திருமண மேடையில் மணப் பெண் மீது துப்பாக்கிச் சூடு

செய்திப்பிரிவு

பக்சார்: பிஹாரின் பக்​சார் மாவட்​டம் முஃ​பாசில் காவல் எல்லைக்​குட்​பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்​கும் (18) உ.பி.​யின் பல்​லியா மாவட்​டத்தை சேர்ந்த இளைஞருக்​கும் நேற்று முன்​தினம் மாலை திரு​மணம் நடை​பெற இருந்​தது.

அப்போது மணமேடை​யில் ஏறிய முகக்​கவசம் அணிந்த ஒருநபர் திடீரென ஆர்த்​தியை துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்​பி​னார். காயம் அடைந்த ஆர்த்​தி, வாராணசி​யில் உள்ள ஒரு மருத்துவமனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். ஆர்த்​தியை ஒருதலை​யாக காதலித்த தீன பந்து என்​பவர் இதை செய்திருக்கலாம் என போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​.

          
SCROLL FOR NEXT