பக்சார்: பிஹாரின் பக்சார் மாவட்டம் முஃபாசில் காவல் எல்லைக்குட்பட்ட சவுசா நகரைச் சேர்ந்த ஆர்த்தி குமாரிக்கும் (18) உ.பி.யின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் நேற்று முன்தினம் மாலை திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது மணமேடையில் ஏறிய முகக்கவசம் அணிந்த ஒருநபர் திடீரென ஆர்த்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார். காயம் அடைந்த ஆர்த்தி, வாராணசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆர்த்தியை ஒருதலையாக காதலித்த தீன பந்து என்பவர் இதை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.