உயி​ரிழந்​த இன்​ஸ்​பெக்​டர் ஆசிஷ் சர்மா

 
இந்தியா

நக்சலுடன் நடந்த என்கவுன்ட்டரில் தீரமான இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய பிரதேசம் - சத்​தீஸ்​கர் - மகா​ராஷ்டிர எல்​லை​யில் ம.பி. நக்​சல் ஒழிப்​புப் படை​யினர் நேற்று அதி​காலை தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அங்கு மறைந்​திருந்த நக்​சலைட்​டு​கள் துப்​பாக்​கியால் சுட்டனர். இதில் இன்​ஸ்​பெக்​டர் ஆசிஷ் சர்மா (40) பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

ம.பி.​யின் நக்​சல் ஒழிப்​புப் படை​யில் பருந்துப் படை என்ற பிரிவு உள்​ளது. இதில் இருப்​பவர்​கள் பெரும்​பாலானோர் வீரதீர செயலுக்​கான விருது பெற்​றவர்கள். அந்​தப் படை​யில் பணி​யாற்​றிய​வர்​தான் இன்​ஸ்​பெக்​டர் ஆசிஷ் சர்​மா.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறுகை​யில், ‘‘ம.பி., சத்​தீஸ்​கர், மகா​ராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்​கள் சந்​திக்​கும் எல்​லை​யில் அடர்ந்த வனப்​பகு​தி​யில் இந்த என்​க​வுன்ட்​டர் நடை​பெற்​றது. நக்​சல்​கள் தரப்​பிலும் உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்​ளன. அவர்​கள் எத்​தனை பேர் இறந்தனர் என்​பது முடி​வில்​தான் தெரிய வரும்​’’ என்​றனர்​.

SCROLL FOR NEXT