இந்தியா

மகாராஷ்டிராவில் காதலன் கொலை: காதலியின் தந்தை உட்பட 6 பேர் கைது

செய்திப்பிரிவு

மும்பை: காதலன் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் காதலி​யின் தந்தை உட்பட 6 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

மகா​ராஷ்டி​ரா​வின் நான்​டெட் பகு​தியை சேர்ந்​த 20 வயதான சாக்​சம் டானை அதே பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆஞ்​சல்​(21) 3 ஆண்​டு​களாக காதலித்து வந்​தார். இவர்​களது காதலுக்கு எதிர்ப்பு தெரி​வித்த ஆஞ்​சலின் தந்​தை, சகோ​தரர்​கள் சாக்​சமை கொலை செய்​தனர். கடந்த மாதம் 27-ம் தேதி சாக்​சமை கடத்​திச் சென்று தாக்​கி, துப்​பாக்​கி​யால் தலை​யில் சுட்​டு, பின்​னர் கல்​லால் தலையை நசுக்கி ஆஞ்​சலின் குடும்​பத்​தார் கொடூர​மாகக் கொலை செய்​தனர்.

இந்​நிலை​யில் ஆஞ்​சல், காதலன் சாக்​சம் வீட்​டுக்​குச் சென்று காதலன் சடலத்​துடன் திரு​மணம் செய்​தார். மேலும் தன்​னுடைய காதலன் வீட்​டிலேயே வாழ்​வேன் என்​றும் அவர் சபதம் செய்​துள்​ளார்.

இந்​நிலை​யில் ஆஞ்​சலின் தந்தை கஜனன் மமித்​வார், அண்​ணன் ஹிமேஷ் உட்பட 6 பேரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் தனி​யார் தொலைக்​காட்​சிக்கு ஆஞ்​சல் நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: எனது அண்​ணன்​களும், எனது தந்​தை​யும் எங்​கள் திரு​மணத்​துக்கு ஏற்​பாடு செய்​வ​தாகக் கூறினர். ஆனால் கடைசி​யில் எங்​களது குடும்​பமே எனக்​குத் துரோகம் இழைத்​து​விட்​டது.

எங்​கள் பகு​தி​யைச் சேர்ந்த 2 போலீஸ்​காரர்​கள் தீரஜ் கோமல்​வார், மஹீத் அசர்​வார் ஆகியோர் எனது அண்​ணன்​களை தூண்டி விட்டு கொலை செய்​யும் அளவுக்​குக் கொண்டு சென்​றுள்​ளனர். நீதி​யைத் தர வேண்​டிய போலீஸ்​காரர்​களே இப்​படி நடந்​து​கொண்​டால் நான் என்ன செய்ய முடி​யும். சாதி வெறி​யால்​தான் இந்த கொலை நடந்​தது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT