பாஜக எம்.பி. தருமபுரி அர்விந்த்
ஹைதராபாத்: பாஜக எம்.பி. தருமபுரி அர்விந்த், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியில் நடைபெற்று வரும் உட்கட்சி பூசல் குறித்து கூறியதாவது:
தெலங்கானா மாநிலத்தில் எத்தனையோ மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளனர். ஆனால், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்த ரேவந்த் ரெட்டிக்கு காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை வழங்கி தவறு செய்து விட்டது. இதுவே உட்கட்சி பூசலுக்கு காரணமாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது. 2028-ல் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் தோல்வியை சந்திக்கும்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரை போலவே தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் பாஜக.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவரும் சுவேந்து அதிகாரியை போல் பாஜகவில் இணைவார் என்று தெரிகிறது. இதனால் 2028-ல் தெலங்கானாவில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.